முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூயார்க் கவர்னர் ஆண்ட்ரூவின் கொரோனா பரிசோதனை டி.வி. நேரலையில் ஒளிபரப்பு

செவ்வாய்க்கிழமை, 19 மே 2020      உலகம்
Image Unavailable

Source: provided

நியூயார்க் : நியூயார்க் கவர்னர் ஆண்ட்ரூ க்யூமோவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டது தொலைக்காட்சி நேரலையில் ஒளிபரப்பானது. அமெரிக்காவில் பிற மாகாணங்களைவிட நியூயார்கில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. நியூயார்க்கில் கவர்னர் க்யூமா தொலைக்காட்சி நேரலை மூலம் மக்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார்.

கொரோனா குறித்த தகவல்களை நேரலையில் மக்களுடன் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது தொலைக்காட்சி நேரலையில் ஒளிபரப்பானது. இதுகுறித்து ஆண்ட்ரூ க்யூமோ சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

கொரோனா பரிசோதனையை செய்து கொள்ள அதிக நேரம் பிடிக்காது. உடனடியாக செய்துகொள்ளலாம். கொரோனா அறிகுறியை உணரும் நியூயார்க்வாசிகள் கொரோனா பரிசோனை செய்து கொள்ள வேண்டும். அவர்கள் மட்டுமல்ல, வேலைக்குச் செல்பவர்கள், மக்களுடன் நேரடித் தொடர்பில் இருப்பவர்கள், நோயாளிகளைக் கவனித்து வருபவர்கள் என நோய்த் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

இதுவரையில் குறைவான நபர்களே தாமாக முன்வந்து பரிசோதனை செய்துள்ளனர். தற்போது கட்டுப்பாடுகளில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டு கடைகள் உள்ளிட்டவை திறக்கப்பட்டு மக்கள் புழக்கம் அதிகரித்து வருகிற நிலையில், அனைவரும் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இவ்வாறு கியூமோ தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து