முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊரடங்கு முடியும் வரை சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களில் இலவச உணவு : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 19 மே 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : ஊரடங்கு முடியும் வரை சென்னையில் உள்ள 40 அம்மா உணவகங்களிலும் இலவச உணவு வழங்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவி்த்துள்ளார். 

 தமிழகத்தில் தற்போது 4-ம் கட்ட ஊரடங்கு வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் அம்மா உணவகங்களில் ஏற்கெனவே 17-ம் தேதி வரை வழங்கப்பட்டு வந்த இலவச உணவு முறை ஊரடங்கு முடியும் வரை நீட்டிக்கப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்துள்ளார்.

தமிழகத்திலேயே சென்னையில் தான் அதிகபட்சமாக 407 அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன. சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்கள் ஊரடங்கு உத்தரவு காலம் முதலே கடந்த 40- 45 நாட்களாக , மக்களுக்கு இலவச உணவு வழங்கி வந்தது. தினந்தோறும் ஏழை எளிய மக்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், கூலி தொழிலாளி மற்றும் சாலை வாசிகள் என பலரும் அம்மா உணவகங்கள் மூலம் பயனடைந்து வந்தனர். இந்த நிலையில் 3-ம் கட்ட ஊரடங்கு மே 17-ம் தேதியுடன் முடிவடைந்ததால், நேற்று முன்தினம் முதல் மீண்டும் அம்மா உணவகங்களில் உணவுக்காக கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

இது வேலையில்லாமல் உணவுக்காக திண்டாடி வரும் ஏழை மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அம்மா உணவகங்களில் கட்டணம் வாங்குவது மக்களுக்கு மிகவும் மேலும் கஷடத்தை கொடுக்கும் என்பதால் ஊரடங்கு காலகட்டத்தில் இலவசமாக உணவு வழங்க வேண்டும் என்று பலரும் வேண்டுகோள் விடுத்த சூழ்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில் சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் வரும் 31-ம் தேதி வரை மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து