முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூர் கலெக்டருக்கு மிரட்டல் விடுத்ததாக புகார்: செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

செவ்வாய்க்கிழமை, 19 மே 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

கரூர் : கரூர் மாவட்ட கலெக்டருக்கு மிரட்டல் விடுத்ததாக செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. மீது 5 பிரிவுகளின் கீழ் தாந்தோணிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கரூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ.வுமான செந்தில்பாலாஜி, தி.மு.க.வின் ‘ஒன்றிணைவோம் வா‘ திட்டத்தின் மூலம் உதவி கேட்டு பெறப்பட்ட மனுக்களை, கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 12-ம் தேதி மாவட்ட கலெக்டர் அன்பழகனை சந்தித்து வழங்கினார். பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், 

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் ஆய்வுக் கூட்டங்களுக்கு அரவக்குறிச்சி எம்.எல்.ஏ.வான தன்னையோ, குளித்தலை எம்.எல்.ஏ. ராமர், கரூர் எம்.பி. ஜோதிமணி ஆகியோரை அழைப்பதில்லை. ஆனால், கிரு‌‌ஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதா, மற்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்பது குறித்து கலெக்டரிடம் கேட்ட போது, கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் கூட்டம் குறித்து தனக்கு தெரியாது என்றும், அவர்கள் தகவல் கிடைத்து வருகின்றனர். உங்களுக்கு தகவல் தெரிந்தால் நீங்களும் கலந்து கொள்ளுங்கள், என்று கூறுகிறார். கலெக்டர் பக்குவம் இல்லாமல் பேசுகிறார். இனி கூட்டங்களுக்கு என்னை அழைக்காவிட்டால், கலெக்டர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில், அவருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்றார்.

இதுகுறித்து தாந்தோணிமலை போலீஸ் நிலையத்தில், மாவட்ட கலெக்டர் அன்பழகன் கடந்த 16-ம் தேதி புகார் கொடுத்தார். அந்த புகார் மனுவில், கடந்த 12-ம் தேதி அலுவலகத்திற்கு 25 பேருடன் வந்த அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி, கொரோனா ஆய்வுக் கூட்டங்களுக்கு எம்.எல்.ஏ. என்ற முறையில் தன்னை அழைப்பதில்லை என்று கேட்டார். பின்னர், நிருபர்களை சந்தித்த செந்தில் பாலாஜி தன்னை அச்சுறுத்தும் வகையில் பேட்டியளித்ததாகவும், அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் தாந்தோணிமலை போலீசார், 5 பேருக்கு மேல் கூட்டமாக வந்தது, ஊரடங்கை மீறியது, தகாத வார்த்தைகளால் திட்டியது, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, கொலை மிரட்டல் விடுத்தது என 5 பிரிவுகளின் கீழ் செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ. மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது தி.மு.க. வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து