முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை சவரன் ரூ.36,288க்கு விற்பனை

புதன்கிழமை, 20 மே 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தங்கம் விலை சவரனுக்கு மீண்டும் 36 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது. 

தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நேரத்தில் நகைக்கடைகள் மூடப்பட்டது. இருந்த போதிலும் நகை விலை  உயர்ந்து வந்தது.  இந்த நிலையில் தற்போது ஏசி இல்லாத நகைக் கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டது. 

இந்நிலையில் நேற்று மீண்டும் தங்கம் விலை உயர்வை சந்தித்துள்ளது.நேற்று முன்தினம் 4 ஆயிரத்து 484 ரூபாயாக இருந்த ஒரு கிராம் தங்கம் விலை நேற்று 52 ரூபாய் அதிகரித்து 4 ஆயிரத்து 536 ரூபாயாக உயர்ந்தது. இதேபோல் ஒரு சவரன் தங்கம் விலை 416 ரூபாய் அதிகரித்து 36 ஆயிரத்து 288 ரூபாயாக இருந்தது.

ஒரு கிலோ வெள்ளியின் விலையும் நேற்று முன்தினம் 51 ஆயிரத்து 500 ரூபாயாக இருந்த நிலையில் நேற்று ஆயிரத்து 200 ரூபாய் அதிகரித்து 52 ஆயிரத்து 700 ரூபாயாக உயர்ந்திருந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து