Idhayam Matrimony

அ.தி.மு.க. நிர்வாகி மரணம் இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். இரங்கல்

புதன்கிழமை, 20 மே 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : வடசென்னை மாவட்டம் ராயபுரம் பகுதி அ.தி.மு.க. முன்னாள் வட்ட செயலாளர் கந்தன் மறைவுக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, 

வட சென்னை தெற்கு மாவட்டம் ராயபுரம் பகுதி 12-வது வட்ட(புதிய வட்டம் 48) முன்னாள் செயலாளர் கந்தன் உடல்நலக்குறைவால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றோம். அன்பு சகோதரர் கந்தனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம். இவ்வாறு அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து