முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தடுப்பு பணி: 3 மாவட்டத்திற்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்தது தமிழக அரசு

புதன்கிழமை, 20 மே 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கொரோனா தடுப்பு பணிக்காக காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக சிறப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு சிறப்பு  அதிகாரிகளாக உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்., அன்பு ஐ.பி.எஸ். ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்திற்கு பாஸ்கரன் ஐ.ஏ.எஸ்., வனிதா ஐ.பி.எஸ் ஆகியோர் சிறப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம்  மாவட்டத்திற்கு சுப்பிரமணியன் ஐ.ஏ.எஸ்., பவானீஸ்வரி ஐ.பி.எஸ் ஆகியோர் சிறப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து