முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து பிரிமீயர் லீக் கால்பந்து வீரர்கள் 6 பேருக்கு கொரோனா

புதன்கிழமை, 20 மே 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

லண்டன் : இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கின் 19 கால்பந்து கிளப்புகளை சேர்ந்த வீரர்களில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவியதற்குப் பின் ஜெர்மனியில் கடந்த சனிக்கிழமை முதன்முதலாக கால்பந்து போட்டிகள் நடைபெற்றன.

இத்தாலி, ஸ்பெயின் கால்பந்து கிளப் அணிகளின் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கிலாந்தில் நடைபெறும் இங்கிலீஷ் பிரிமீயர் லீக் அடுத்த மாதம் 2-வது வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே 19 கிளப்புகளை சேர்ந்த 748 வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டதில், 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மற்ற கிளப்புகள் இன்னும் முடிவை வெளியிடவில்லை. அதன்பின்தான் ஒட்டுமொத்த முடிவுகள் தெரியவரும். இத்தாலியில் ஜூன் 14-ம் தேதி வரை போட்டிகளை நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. வீரர்கள் தயாராகி வருகின்றனர். அரசு அனுமதி கிடைத்ததும் போட்டிகள் தொடங்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து