எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொல்கத்தா : மேற்கு வங்கத்திற்கும், வங்கதேசத்திற்கும் இடையே ஆம்பன் புயல் கரையை கடந்தது. இதனால் அப்பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த கன மழை பெய்தது. மரங்கள், மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்தன. புயல் கரையை கடந்ததும் மீட்பு படையினர் துரிதமாக செயல்பட்டு மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.
வங்கக்கடலில் உருவான ஆம்பன் புயல், சூப்பர் புயலாக வலுப்பெற்று வடக்கு - வடகிழக்கு நோக்கி நேற்று முன்தினம் மேற்கு வங்காளத்தை நெருங்கிய போது அதி தீவிர புயலாக வலுவிழந்தது. நேற்று காலை புயல் மேலும் நகர்ந்து, பூரி - கொல்கத்தா இடையே வங்கக் கடலில் மையம் கொண்டிருந்தது. இதன் காரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தின் கடலோர பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இந்நிலையில், ஆம்பன் புயல் மேலும் வடக்கு நோக்கி நகர்ந்து,
தீவிர புயலாக வலுவிழந்து, நேற்று பிற்பகல் மேற்கு வங்கத்தின் திகா மற்றும் வங்கதேசத்தின் ஹதியா தீவுகள் பிற்பகல் 2.30 மணியளவில் கரை கடக்கத் தொடங்கியது. கரைகடக்கும் நிகழ்வு கிட்டத்தட்ட 4 மணி நேரம் நீடிக்கும் என்றும், அதன்பின்னர் புயல் வலுவிழக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்து இருந்தது.
புயல் கரை கடக்கத் தொடங்கியதும் மணிக்கு 160 கிமீ முதல் 170 கிமீ வரை வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. இதனால் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் மழையும் படிப்படியாக அதிகரித்தது. புயல் கரையை கடந்த பிறகு, வடக்கு - வடகிழக்கு நோக்கி நகர்ந்து, கொல்கத்தாவுக்கு அருகில் செல்லக் கூடும் என்றும் இதனால் பலத்த மழை பெய்து, நகரின் தாழ்வான பகுதிகளில் கடுமையான சேதம் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்திருந்தது.
ஆம்பன் புயல் கரையை கடந்து வந்த நிலையில், தேசிய பேரிடர் மேலாண் படை தலைவர் எஸ்.என். பிரதான் கூறும் போது, மேற்கு வங்காளத்தில் இருந்து 5 லட்சத்திற்கும் கூடுதலானோர் மற்றும் ஒடிசாவில் இருந்து ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 640 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டு உள்ளனர் என தெரிவித்து இருந்தார்.
பானி புயலில் ஏற்பட்ட அனுபவத்தினால், மரம் வெட்டும் கருவிகள், மின்கம்பங்கள் வெட்டும் கருவிகள் ஆகியவற்றை அனைத்து குழுக்களும் தயார் நிலையில் வைத்துள்ளன. தேவைப்பட்டால் அவை உபயோகிக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆம்பன் புயல் சூப்பர் புயலாக உருவெடுத்து அதன்பின் அதிதீவிர புயலாக உருமாறி நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் மேற்கு வங்கம், வங்கதேசம் இடையே கரையை கடக்க தொடங்கியது. புயல் கரையை கடந்த போது மணிக்கு 165 கி.மீ வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதன் காரணமாக மரங்களும், மின் கம்பங்களும் அடியோடு சாய்ந்தன. இதையடுத்து தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதற்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தாழ்வான பகுதிகளில் இருந்து பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
புயல் நிலவரத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி கண்காணித்தார். இந்த புயல் ஒடிசா மாநிலத்தையும் விட்டு வைக்கவில்லை. அங்கும் பலத்த காற்று வீசியதால் மரங்கள், மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்தன. ஏற்கனவே இந்திய மக்களை கொரோனா வைரஸ் தொற்று படாதபாடுபடுத்திக் கொண்டிருக்கும் இந்த வேளையில் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநில மக்கள் ஆம்பன் புயலாலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் ஒரு வேதனைக்குரிய விஷயம்.
தமிழகத்தில் பாதிப்பில்லை
இந்த புயலால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும் கடல் சீற்றம் பல இடங்களில் காணப்பட்டது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. திருவள்ளூர் மாவட்டத்தில் கடலோர பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் சேதமடைந்தன. திருவெற்றியூரிலும் அதே நிலைதான். குறிப்பாக காசிமேட்டு பகுதியில் கடல் அலைகள் ஆக்ரோஷத்துடன் காணப்பட்டன. புதுச்சேரியிலும் கடல் சீற்றம் காணப்பட்டது. இருந்தாலும் மீனவர்களின் படகுகளுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. தமிழகத்தில் நேற்று பல நகரங்களில் வெயில் வெளுத்து வாங்கியது.
இந்த நிலையில் சென்னையில் அனல்காற்று அதிகமாக வீசியதால் சாலைகளில் மக்களால் செல்ல முடியவில்லை. வாகனங்களில் சென்றவர்கள் இந்த வெப்பக்காற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த வெப்பக்காற்றும் மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என்று சென்னை மண்டல வானிலை துணை இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.