முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதிப் பகிர்வில் தமிழகத்திற்கு ரூ.1,928 கோடி விடுவிப்பு : மத்திய நிதியமைச்சர் நிர்மலா அறிவிப்பு

புதன்கிழமை, 20 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதிப் பகிர்வில் தமிழகத்திற்கு ரூ.1,928 கோடி விடுவித்துள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போது மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையில் பெரும்பாலானவற்றை விடுவிக்க முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல் தவணையாக 28 மாநிலங்களுக்கு ரூ.5005.25 கோடி ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதில் தமிழகத்திற்கு ரூ.295 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

இந்நிலையில் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய மே மாதம் நிதிப்பகிர்வில் தமிழகத்திற்கு ரூ. 1,928 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. 28 மாநிலங்களுக்கு மொத்தமாக ரூ. 46,038.70 கோடியை விடுவித்துள்ளது. இதற்கான உத்தரவை மத்திய நிதியமைச்சகம் பிறப்பித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து