முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும்: வானிலை மையம்

வியாழக்கிழமை, 21 மே 2020      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலின் தென்பகுதியில் சமீபத்தில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறியது. அந்த புயலுக்கு ஆம்பன் என பெயர் சூட்டப்பட்டது. இந்த புயல் வலுவடைந்து சூப்பர் புயலாக மாறி வடக்கு திசையில் மேற்கு வங்காளத்தை நோக்கி நகர்ந்ததன் காரணமாக மேற்கு வங்காளம், ஒடிசா மாநிலங்களையொட்டிய கடல் பகுதி கொந்தளிப்புடன் காணப்பட்டது.  இந்தப்புயல் மேற்கு வங்காளத்தில் கரையைக் கடந்தது. ஆம்பன் புயல் காற்றில் உள்ள ஈரப்பதத்தை ஈர்த்துக் கொண்டது. இதனால், தமிழகத்தில் குறிப்பாக வட தமிழகத்தில்  வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த மூன்று தினங்களுக்கு அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   பலத்த காற்று வீசும் என்பதால் மன்னார் வளைகுடா பகுதிக்கு மீனவர்கள் 2 நாட்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து