முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் மேலும் புதிதாக 786 பேருக்கு கொரோனா

வெள்ளிக்கிழமை, 22 மே 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் நேற்று மேலும் 786 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று முன்தின  நிலவரப்படி, கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 967 ஆக இருந்தது. மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து 6 ஆயிரத்து 282 பேர் குணமடைந்திருந்தனர். ஆனாலும், மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை  94 ஆக இருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான  நிலவரத்தை மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. அந்த தகவலின்படி, மாநிலத்தில் நேற்று புதிதாக 786 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 753 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 128 ஆக உயர்ந்துள்ளது. ஆனாலும், கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 98 ஆக அதிகரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து