முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழிலாளர்களை கவனிப்பது மாநிலங்களின் பொறுப்பு : நிதி ஆயோக் அதிகாரி கருத்து

சனிக்கிழமை, 23 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை நன்றாக கவனித்து கொள்வது மாநிலங்களின் பொறுப்பு என நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் கந்த் கூறினார்.

இது குறித்து நிடி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் கந்த், தனியார் டி.வி. ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 

ஊரடங்கு காரணமாக வெளிமாநிலங்களுக்கு சென்று பிழைக்கும் தொழிலாளர்களின் நிலை கொடுமையாக மாறியுள்ளது. இவர்கள் விஷயத்தில் நாம் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்னை பெரிய சவால் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் உருவாக்கிய சட்டங்களினால் பொருளாதாரத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் பெரிய அளவில் உருவாகினர்.

தொழிலாளர்களை நன்றாகக் கவனித்துக் கொள்வது மாநிலங்களின் பொறுப்பு. இந்த சவாலில் நாம் இன்னும் கொஞ்சம் நன்றாக செயல்பட்டிருக்கலாம். ஒவ்வொரு தொழிலாளரையும் நன்றாக வைத்திருப்பதில் மாநில, மாவட்ட மட்டத்தில் நாம் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து