முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூன் 2-ம் வாரத்திலிருந்து நீட் தோ்வுக்கான பயிற்சிகள் துவக்கம் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 24 மே 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

கோபி : நீட் தோ்வுக்கான பயிற்சிகள் ஜூன் 2-ம் வாரத்திலிருந்து தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளுக்கு நீட் என்ற நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். அதில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதன்படி, 2020-21-ம் கல்வியாண்டுக்கான மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பது தொடர்பான அறிவிப்பு கடந்த ஆண்டு (2019) டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது. 

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், பயிற்சி மையங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு காரணமாக மே மாதம் நடைபெற இருந்த நீட் தேர்வுக்கு தயாராவதில் மனரீதியாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்றும் மாணவர்களும், பெற்றோரும் கோரிக்கை விடுத்து இருந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று மே மாதம் 3-ம் தேதி நடைபெறுவதாக இருந்த நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது;-

நீட் தேர்வுக்கான பயிற்சிகள் ஜூன் மாதம் 2-ம் வாரத்திலிருந்து தொடங்கவுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார். மேலும் மொத்தம் 7,300 மாணவர்களுக்கு 9 கல்லூரிகளில் 35 நாட்களுக்கு நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படும் எனவும் பள்ளிகள் திறப்பு எப்பொழுது என்பது, சூழ்நிலைக்கேற்ப விரைவில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து