எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள ஒட்டமெத்தையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பள்ளிபாளையம் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தையும் குமாரபாளையம் அருகே உள்ள வெப்படையில் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தையும் அமைச்சர் தங்கமணி நேற்று தொடங்கி வைத்தார். மேலும், ரூ.30 லட்சம் மதிப்பில் குமாரபாளையம் அம்மா உணவகத்தின் விரிவாக்கப்பட்ட கூடுதல் கட்டிடத்தையும், ஆவத்திப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியின் கூடுதல் வகுப்பறை கட்டிடப் பணிகளை அடிக்கல் நாட்டியும் அவர் தொடங்கி வைத்தார்.
அதை தொடர்ந்து வெப்படையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் பி.தங்கமணி கூறியதாவது,
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் புதிய மின இணைப்பு பெற்றவர்களுக்கு மின் மீட்டர் பொருத்துவதாக, ஒரு தொலைக்காட்சியில் செய்தி வெளியானது தவறான தகவலாகும். தமிழகத்தை பொறுத்தவரை முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., கொண்டு வந்த இலவச மின்சாரத் திட்டம் முழுமையாக தொடர வேண்டும் என்பது தான் தமிழக முதலமைச்சரின் எண்ணமாகும். மத்திய அரசு உத்தேசித்துள்ள புதிய மின் திருத்தச் சட்டத்தில் இலவச மின்சாரம் பாதிகப்படக் கூடாது என்பதற்காக மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதி வலியுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் இலவச மின்சாரத்தில் எந்தவிதத்திலும் ரத்து செய்யக் கூடாது என்பது தான் தமிழக அரசின் கொள்கையாகும். ஏற்கனவே விவசாயிகளுக்கு மின் இணைப்புக்கு தட்கல் திட்டத்தில் மட்டும் மின் மீட்டர் பொருத்தப்பட்டது. அதையும் தற்பொழுது முதலமைச்சர் மீட்டர் பொருத்த வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார். எனவே பொதுமக்கள் மத்தியில் தேவையில்லாத பதட்டத்தை அந்த தனியார் தொலைக்காட்சி ஏற்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
ஒரு மின்மாற்றியில் லோடு திறன் இருந்தால் மட்டுமே, ஏற்கனவே மின் இணைப்பு பெற்றுள்ள விவசாயிகளின் விருப்பத்திற்கு ஏற்ப புதிதாக மின்மோட்டாரின் குதிரை சக்தித் திறன் அதிகரிக்க மின்வாரியம் மனுக்களை பெற்று வருகிறது. ஆழமான நீர்மட்டம் கொண்ட கிணற்றில் இருந்து அதிக குதிரைத்திறன் சக்தியுள்ள மின் மோட்டாரை பயன்படுத்த ஹெச்.பி ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது முற்றிலும் விவசாயிகளின் விருப்பத்தின் பேரில் மட்டுமே செயல்படுத்தப்படும். வருகின்ற ஜூன் மாதம் 30-ம் தேதி வரை விவசாயிகள் விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் அளிக்கலாம். இந்தத் திட்டத்தில் விவசாயிகளை கட்டாயப்படுத்தி கட்டணம் பெறுவது கிடையாது. ஆனால், இந்தத் திட்டத்தில் விவசாயிகளை கட்டாயப்படுத்தி டெபாசிட் கட்டணம் பெறுவதுபோல தவறான தகவலை அந்த ஊடகம் வெளியிட்டுள்ளது. ஒரு மின் இணைப்புக்கு மின்சாரம் அளிக்க மின்வாரியத்திற்கு பல லட்சங்கள் செலவு ஆகிறது. இருந்தபோதிலும், தமிழக அரசு, விவசாயிகள் பாதிக்கின்ற வகையில் எந்தவொரு திட்டத்தையும் கொண்டு வராது.
மாநில அரசின் உரிமையை எந்த நேரத்திலும் முதல்வர் விட்டுக் கொடுக்க மாட்டார். இலவச மின்திட்டத்தில் எந்த சமரசமும் கிடையாது. தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருவது ரத்து செய்யப்பட மாட்டாது. தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடரந்து வழங்கப்படும். தமிழகத்தில் உள்ள எந்த விவசாயிகளும் இலவச மின்சாரம் குறித்து கவலைப்பட தேவையில்லை. மின்வாரியத்தில், கேங்மேன் தேர்வு நடைபெற்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஏற்கனவே, சட்டசபையில் அறிவித்தபடி, மேலும் 5 ஆயிரம் பணியிடங்கள் நிரப்புவது குறித்து முதலமைச்சரிடம் கலந்து பேசி முடிவெடுக்கப்படும்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் வெப்படை பகுதிகளில் நூற்பாலைகள் அதிகம் உள்ளதால் மின்சாரத் தேவை, பயன்பாடு அதிகமாக உள்ளது. நீண்டநாள் கோரிக்கையாக இப்பகுதி மக்கள் பயன் பெறும் வகையில் மேட்டூர் அல்லது சங்ககிரி சென்று சேவைகளை பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்த பொதுமக்களுக்கு தற்போது பள்ளிபாளையம் மற்றும் வெப்படை பகுதியில் இந்த அலுவலகங்கள் தற்போது அமைக்கப்பட்டுள்ளது மூலம் அவர்களுக்கு மின்சார சேவைகள் உடனடியாக கிடைக்கும். காலதாமதமின்றி இப்பணிகள் நடத்தி முடிக்க முடியும். இந்த செயற்பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர் அலுவலகங்கள் புதிதாக கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் இப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட நூற்பு ஆலைகள் பயன்பெறும். மக்கள் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றும் அரசு என்பதற்கு இதுவே உதாரணம் ஆகும்.
தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இதில் ஊழல் நடந்திருப்பதாக கூறுவது அரசியல் காரணங்களுக்காக மட்டுமே ஆகும். மாநிலம் முழுவதும் மாவட்ட நிர்வாகம், காவல் துறை சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்து அரசு துறைகள் சார்பிலும், மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் மக்களை சந்தித்து கொரோனா நிவாரண பொருட்களை வழங்கியும் கொரோனா தடுப்பு பணிகளிலும் ஈடுபட்டு தேவையான உதவிகளை வழங்கி வருகின்றனர்.
நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மக்களை சந்திக்காமல் கொரோனா பணிகள் குறித்து தவறான தகவலை அளித்து வருகிறார். மக்கள் பிரதிநிதி மக்கள் தேவைகளை அறிந்து செயல்பட வேண்டுமே தவிர இதுபோன்ற தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தக் கூடாது. பிற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக தமிழகம் கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. தமிழக முதல்வர் பணிகளில் முழு வீச்சில் மேற்கொண்டு வரும் நேரத்தில் அரசியல் செய்வதற்காக இது போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சித் தலைவர் பதவி சார்ந்தவர்கள் சுமத்தி வருகின்றனர் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
இந்த நிகழ்சிகளில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ், தமிழ்நாடு மின்சார வாரிய ஈரோடு மண்டல தலைமைப் பொறியாளர் வரத. சந்திரசேகரன், மேட்டூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் இந்திராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 5 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
18 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடு: மதுரை கலெக்டர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதிப்பு
18 Apr 2024மதுரை, கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற மதுரை கலெக்டரின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.