முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 மாதங்களுக்கு பின் ஆந்திரம் வருகிறார் சந்திரபாபு நாயுடு

ஞாயிற்றுக்கிழமை, 24 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

ஐதராபாத் : ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு 2 மாத கால இடைவெளிக்கு பிறகு ஆந்திரத்துக்கு இன்று வருகை தர உள்ளார். 

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த மார்ச் 20-ம் தேதி தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்துக்கு சென்றார். அதற்கு பின் நாடு முழுவதும் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அவர் அங்கேயே தங்கும் நிலை ஏற்பட்டது. அதனால் அவர் கடந்த 2 மாதங்களாக ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் தங்கியிருந்தார். தற்போது பொது முடக்கத்தில் சில தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் அவர் தெலுங்கானாவில் இருந்து ஆந்திரத்துக்கு வர இரு மாநிலங்களிடமும் அனுமதி கோரி விண்ணப்பித்தார்.

தெலுங்கானா மாநிலம் உடனடியாக அனுமதி வழங்கிய நிலையில் ஆந்திர மாநிலம் இன்னும் அனுமதி வழங்கவில்லை. அனுமதி கிடைத்தவுடன் அவர் இன்று காலை ஐதராபாத்தில் இருந்து விஜயவாடாவிற்கு புறப்பட உள்ளார். 2 மாத கால இடைவெளிக்கு பின் ஆந்திரத்துக்கு சந்திரபாபு நாயுடு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து