முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவமனையில் ஓ.பி.எஸ் : நேரில் சென்று உடல் நலம் விசாரித்த முதல்வர் எடப்பாடி

திங்கட்கிழமை, 25 மே 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனைக்காக  தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  அனுமதிக்கப்பட்டார்.

இதைப்பற்றி அறிந்ததும் மருத்துவமனைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்று நேரில் உடல் நலம் விசாரித்தார்.

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு ஓ.பன்னீர்செல்வத்துக்கு நேற்று முழு உடல் பரிசோதனை நடந்தது. ஓ.பன்னீர் செல்வம் பூரண உடல் நலத்துடன் இருப்பதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ஓ.பன்னீர்செல்வத்திடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உடல்நலம் குறித்து விசாரித்தார். பூரண நலம் பெற இறைவனை பிரார்த்திப்பதாகவும் ஓ.பன்னீர்செல்வத்திடம் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். முன்னதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சந்தித்து நலம் விசாரித்தார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் உடன் சென்றிருந்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து