முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சரின் மாமியார் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி இரங்கல்

திங்கட்கிழமை, 25 மே 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : அமைச்சர் சி.வி.சண்முகத்தின் மாமியார் மறைவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:-

சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மாமியார் திருமதி ராதா அம்மாள் அவர்கள் உடல் நலக் குறைவின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். ராதா அம்மாள் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ராதா அம்மாள் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற  எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து