முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் வந்த மத்திய அமைச்சர் சதானந்தகவுடா நேராக வீட்டிற்கு சென்றதால் சர்ச்சை

செவ்வாய்க்கிழமை, 26 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

பெங்களூரு : டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் வந்த மத்திய அமைச்சர் நேராக வீட்டிற்கு சென்றதால் சர்ச்சை எழுந்து உள்ளது. 

நாடு முழுவதும் நேற்று முன்தினம் உள்நாட்டு விமான சேவை தொடங்கி உள்ளது. அதன்படி, சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்திற்கு 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் வந்தன. அந்த விமானங்களில் வந்தவர்களை அதிகாரிகள் அழைத்து சென்று ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் தனிமை கண்காணிப்பில் தங்க வைத்தனர். 

இதற்கிடையே டெல்லியில் இருந்து மற்ற பயணிகளுடன் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சரான சதானந்தகவுடா பெங்களூருவுக்கு விமானத்தில் வந்திருந்தார். அவருக்கு விமான நிலையத்தில் வைத்து பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் மத்திய அமைச்சர் சதானந்தகவுடா விமான நிலையத்தில் இருந்து காரில் ஏறி புறப்பட்டு தனது வீட்டுக்கு சென்றார்.

இதை பார்த்த மற்ற பயணிகள், மத்திய அமைச்சரை  மட்டும் தனிமைப்படுத்தாமல் வீட்டுக்கு அனுப்புவதா? என்று அங்கிருந்த அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்கள். அதோடு சதானந்தகவுடாவை தனிமைப்படுத் தாததற்கு மற்ற பயணிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து மத்திய அமைச்சர் சதானந்தகவுடா நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அமைச்சராக இருக்கும் நான் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகிறேன். பெங்களூரு விகாச சவுதாவில் அதிகாரிகளுடன் ஒரு கூட்டம் நடத்துவதற்காக டெல்லியில் இருந்து வந்துள்ளேன். கடந்த 63 நாட்களாக டெல்லியில் இருந்தேன். பெங்களூருவில் முக்கியமான கூட்டத்தில் மத்திய அமைச்சரான நான் கலந்துகொள்ள இருப்பதால் சக பயணிகளுடன் விமானத்தில் வந்துள்ளேன். நான் ஒரு மத்திய அமைச்சர் என்பதால், கொரோனா தொடர்பான விதிமுறைகளில் எனக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே என்னை தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

இதில் எந்த விதிமுறை மீறலும் இல்லை.மத்திய அமைச்சர் என்பதால் நாடு முழுவதும் சென்று வருவதற்கு அனுமதி உள்ளது. நான் ஆரோக்கிய சேது செல்போன் செயலியை பயன்படுத்தி வருகிறேன். அந்த செயலியில் நான் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் வந்துள்ளது. எல்லாவற்றையும் தெரிந்து கொண்டுதான், எனது பொறுப்பை உணர்ந்து செயல்பட்டு வருகிறேன்.

டெல்லியில் இருந்த போது 3 நாட்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்து கொண்டேன். பரிசோதனை முடிவில் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரியவந்துள்ளது. கொரோனா அறிகுறி இருந்தால் தனிமை முகாமுக்கு நானே சென்று விடுவேன். இந்த சம்பவத்தை பெரிது படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து