முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாராஷ்டிரா அமைச்சர் அசோக் சவானுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

செவ்வாய்க்கிழமை, 26 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

மும்பை : மகாராஷ்டிரா மாநில அமைச்சர் அசோக் சவானுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா அசுர வேகத்தில் பரவி வருகிறது. இ்ங்கு பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்து உள்ளது. பொதுமக்கள் தவிர போலீசார், சுகாதார பணியாளர்கள், பெஸ்ட் ஊழியர்கள், மத்திய படை வீரர்கள் என பல தரப்பினரையும் தொற்று தாக்கி உள்ளது.

இந்த நிலையில் கடந்த மாத இறுதியில் மகாராஷ்டிரா மாநில வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜிதேந்திர அவாத் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். பின்னர் தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமாகி ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் மாநில பொதுப்பணித்துறை அமைச்சரும், முன்னாள் முதல்வருமான அசோக் சவான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். மூத்த காங்கிரஸ் தலைவரான இவர் நாந்தெட் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் பணி நிமித்தமாக மும்பை - நாந்தெட் இடையே அடிக்கடி பயணித்து உள்ளார்.

அதன்படி சில நாட்களுக்கு முன் மும்பை வந்துள்ளார். அதன் பிறகு நாந்தெட் திரும்பிய அவர் கொரோனா அறிகுறியுடன் வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். இதையடுத்து நடந்த பரிசோதனையில் அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது அமைச்சர் நாந்தெட்டில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மராட்டியத்தில் மேலும் ஒரு அமைச்சருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது அரசியல் தலைவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து