முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: பிரதமர் மோடிக்கு ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் தத்தாத்ரேயா ஹோசபல் பாராட்டு

செவ்வாய்க்கிழமை, 26 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கொரோனா தடுப்பு விஷயத்தில் பிரதமர் மோடி சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்ததாக அவரை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பாராட்டியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மூத்த தலைவர் தத்தாத்ரேயா ஹோசபல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

மார்ச் மாத துவக்கத்தில்  மத்திய அரசு விமான நிலையங்களில்  தெர்மல் ஸ்கிரீன் மூலம் பரிசோதனைகளை நடத்தியது. அப்போதே, கொரோனா வைரஸை எதிர்கொள்வது தொடர்பான திட்டங்கள் தயாரிக்கப்பட தொடங்கின. கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள சரியான நேரத்தில்,  சரியான நடவடிக்கையை பிரதமர் மோடி எடுத்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுடன் நேரடியாக தொடர்பை பிரதமர் மோடி ஏற்படுத்தினார். கடந்தசில  ஆண்டுகளாகவே அவர் இதனை கடைபிடித்து வருகிறார்.  கூட்டாட்சி தத்துவத்தையும் பிரதமர் மோடி சிறப்பாக கையாள்கிறார்.

கொரோனா பாதிப்பின் போது, பல்வேறு மாநில முதல்வர்களை தொடர்பு கொண்டு அவர்களை ஊக்கப்படுத்தினார். இத்தாலி,  அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் உயிரிழப்பு மிகக்குறைவாக உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து