முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது: 4 பேர் பலி

புதன்கிழமை, 27 மே 2020      உலகம்
Image Unavailable

Source: provided

மாஸ்கோ : ரஷ்யாவில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ராணுவ ஹெலிகாப்டர் விமானம் விபத்துக்குள்ளானதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள தன்னாட்சி பெற்ற சுகோட்கா பிராந்தியத்தில் இருந்து அந்த நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான எம்.ஐ.8 ரக ஹெலிகாப்டர் வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது. ஹெலிகாப்டரில் 3 வீரர்களும், ஒரு தொழில்நுட்ப வல்லுனரும் இருந்தனர். இந்த ஹெலிகாப்டர் பயிற்சியை முடித்துக் கொண்டு சுகோட்கா பிராந்தியத்தின் அனாடிர் நகருக்கு திரும்பியது.

அனாடிர் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற போது, ஹெலிகாப்டரில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் தரையிறங்க முடியாமல் ஹெலிகாப்டர் வானில் வட்டமடித்தது.பின்னர் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் விமான நிலையத்தின் ஓடுபாதையில் விழுந்து நொறுங்கியது.

இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஒரு வாரத்துக்குள் ரஷ்ய ராணுவ ஹெலிகாப்டர் எம்.ஐ.8 விபத்துக்குள்ளாவது இது 2-வது முறையாகும். கடந்த 19-ம் தேதி தலைநகர் மாஸ்கோ அருகே உள்ள கிலின் நகரில் எம்.ஐ.8 ரக ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து