முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரியில் 200-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 10-ம் வகுப்பு தேர்வு : ஜூலை முதல் வாரத்தில் கல்லூரி இறுதியாண்டு தேர்வு

புதன்கிழமை, 27 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுவை : காரைக்காலில் 200-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பத்தாம் வகுப்புத் தேர்வை நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம் என்று புதுச்சேரி கல்வியமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கால் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு புதுச்சேரி பள்ளிக்கல்வி இயக்கம் சார்பில் காணொலி காட்சி வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கல்வித்துறை வளாகத்தில் உள்ள மெய்நிகர்க் கட்டுப்பாட்டு அறையில் நடந்த ஒளிப்பதிவு நிகழ்ச்சியில் அனைத்து பாடங்களிலும் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஆசிரியர்கள் விளக்கமளித்து வருகின்றனர்.

ஒளிப்பதிவு செய்த பாடங்கள், கேள்வி, பதில்கள் கல்வித் துறையின் யூ டியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. 3 ஆயிரத்து 844 பேர் யூ டியூப் சந்தாதாரர்களாக இணைந்துள்ளனர். யூ டியூப் வழியாக படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 226-ஐக் கடந்துள்ளது. கல்லூரி மாணவர்கள் வீட்டில் இருந்து படிக்க இணையவழியாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மே 24-ம் தேதி வரை 1,68 கல்லூரி ஆசிரியர்கள் வகுப்புகளை நடத்தியுள்ளனர். 

இந்நிலையில் கல்வித்துறை தொடர்பாக புதுச்சேரி கல்வியமைச்சர் கமலக் கண்ணன் கூறியதாவது, தமிழக அரசு அறிவித்துள்ள தேதிகளில் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு தேர்வு நடைபெறும். சமூக இடைவெளியுடன் 200-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் தேர்வுகள் நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம். தமிழக அரசைப் பின்பற்றியே புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு இருக்கும். தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் வசூலிக்க கூடாது என அறிவுறுத்தியுள்ளோம்.

தொடர்ந்து இது தொடர்பான புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் எடுப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். கல்விக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக பெற்றோர்கள் முன்வந்து புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து