முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாளையுடன் ஊரடங்கு முடியுமா?; பிரதமர் மோடியுடன் அமித்ஷா ஆலோசனை

வெள்ளிக்கிழமை, 29 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : நாடு முழுவதும் பொதுமுடக்கத்தை நீட்டிப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் மத்திய உள்துறை அமித்ஷா ஆலோசனை நடத்தினார். 

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இப்போது வரை இது 4 -வது முறையாக நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. 4-வது ஊரடங்கு நீட்டிப்பு வரும் 31-ம் தேதியுடன் முடிகிறது. கொரோனா வேகமாக பரவி வருவதால், மே 31-க்குப் பிறகும் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதற்கிடையே, ஜூன் 1-ம் தேதி முதல் 5-வது கட்ட ஊரடங்கு அறிவிக்கலாமா? அல்லது அதிகளவில் தளர்வுகள் வழங்கலாமா? கொரோனா தடுப்பு குறித்த தற்போதைய நிலை என்ன? அனைத்து மாநிலங்களிலும் எந்த மாதிரியான சூழ்நிலை  நிலவுகிறது என்பது குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று முன்தினம் டெல்லியில் இருந்தபடி, காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

மாநில முதல்வர்களின் கருத்துகளையும் அவர் கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து, 4-வது கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து ஊரடங்கு தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை  நடத்தினார். பிரதமர் மோடியுடனான ஆலோசனை  முடிந்த பின், ஊரடங்கு குறித்த முடிவுகள் வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து