முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் நிகழ்ந்த என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

சனிக்கிழமை, 30 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரின் குல்காம் பகுதியில் நடந்த என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பதுங்கியிருந்து நாசவேலைக்கு சதி திட்டம் தீட்டி வரும் பயங்கரவாதிகளை உள்ளூர் போலீசாரின் உதவியுடன் பாதுகாப்பு படையினர் வேட்டையாடி வருகின்றனர். இந்நிலையில், குல்காம் மாவட்டம் வான்போரா பகுதியில் ராணுவம், சிஆர்பிஎஸ் மற்றும் போலீசார் இணைந்து நேற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து