முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க. அரசு 2-ம் ஆண்டு தொடக்கம்: மாயாவதி கருத்து

சனிக்கிழமை, 30 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

லக்னோ : ஏழைகள், விவசாயிகள், வேலையில்லாதோர், புலம்பெயர் தொழிலாளர்கள், பெண்கள் என தேசத்து மக்களின் வாழ்க்கை முன்பு இருந்ததைவிட வலியும், வேதனையும் மிகுந்ததாக மாறிவிட்டது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு தனது கொள்கையை மறு ஆய்வு செய்து, வெளிப்படையாக மக்களுக்காகப் பணியாற்ற வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி சாடியுள்ளார்.

 

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் 2-வது முறையாக ஆட்சியைப் பிடித்து நேற்றுடன் ( 30-ம் தேதி) ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி டுவிட்டரில் பா.ஜ.க. அரசின் 2-ம் ஆண்டு தொடக்கம் குறித்து விமர்சித்துள்ளார். அவர் பதிவிட்ட கருத்தில், மத்தியில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான அரசு 2-வது முறையாக ஆட்சியில் அமர்ந்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. ஏராளமான வாக்குறுதிகள் மக்களிடம் அளிக்கப்பட்டன.ஆனால், அந்த வாக்குறுதிகள் புரிந்து கொள்ளுதலிலும், யதார்த்தத்திலும், மக்கள் கருத்திலும் வெகு தொலைவு செல்லாமல் இருப்பது சிறப்பாகும். பா.ஜ.க. அரசின் ஆட்சியில் எங்கும் சர்ச்சைகள் நிரம்பியதாக இருக்கின்றன.

ஆதலால், நாட்டு மக்களின் நலனிலும், தேசத்தின் மீதும் அக்கறை வைத்து பா.ஜ.க. அரசு பணியாற்ற வேண்டும். ஏழைகள், விவசாயிகள், வேலையில்லாதோர், புலம்பெயர் தொழிலாளர்கள், பெண்கள் என தேசத்தின் மக்களின் வாழ்க்கை முன்பு இருந்ததைவிட வலியும், வேதனையும் மிகுந்ததாக மாறியுள்ளது வருத்தமாகவும், எளிதில் மறக்க முடியாததாகவும் இருக்கிறது.

மத்திய அரசு தனது கொள்கைகளையும், பணியாற்றும் விதத்தையும் மறு ஆய்வு செய்து வெளிப்படைத் தன்மையுடன் செயலாற்ற வேண்டும். குறைபாடுகளைக் களைய வேண்டும். தேசத்தின் மீது அக்கறை வைத்தும், மக்களின் நலனுக்காகவும் பகுஜன் சமாஜ் இந்த அறிவுரையை வழங்குகிறது என்று மாயாவதி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து