முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

29-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

திங்கட்கிழமை, 1 ஜூன் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னையில் நேற்று பெட்ரோல் விலை, லிட்டருக்கு 75.54 ரூபாய், டீசல் விலை, லிட்டருக்கு 68.22 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வருவாயை பெருக்குவதற்காக, பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை உயர்த்தி, தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதன்படி, பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டு வரி, 28லிருந்து, 34 சதவீதமாகவும், டீசல் மீதான வரி, 20லிருந்து, 25 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டது. அதனால், பெட்ரோல் விலை லிட்டருக்கு, 3.26 ரூபாயும், டீசல் விலை, 2.51 ரூபாயும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு, மே 4 முதல் அமலுக்கு வந்தது.

இந்நிலையில், சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி, 29-வது நாளாக ஒரே விலையில் தொடர்கிறது. இதன்படி, பெட்ரோல் 75.54 ரூபாயாகவும், டீசல் 68.22 ரூபாயாகவும் உள்ளது.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து