முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராட்சத விண்கல் உட்பட 6 விண்கற்கள் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்கிறது: நாசா அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வியாழக்கிழமை, 4 ஜூன் 2020      உலகம்
Image Unavailable

3 விண்கற்கள் பூமிக்கு மிக அருகில் வந்து செல்லவிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

விண்கல் என்பது பூமி வளிமண்டலத்தில் இருந்து பூமியை அடையும் பொருளாகும். பூமிக்கு மிக அருகில், அதாவது, சுமார் 62 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் பூமியைக் கடந்து செல்ல உள்ளதாகத் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து 12 முதல் 28 மீட்டர் விட்டமுள்ள 2020 கே ஏ 6 என்ற மற்றொரு விண்கல்லும் பூமியை நெருங்கியபடி, அதாவது, சுமார் 44.7 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் பூமியைக் கடந்து செல்ல உள்ளதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். இதே போல் 250 மீ மற்றும் 570 மீ விட்டமுள்ள 2002 என்என் 4 என்ற ராட்சத விண்கல்லும் பூமியை நெருங்கியபடி, அதாவது, சுமார் 50.9 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் பூமியைக் கடந்து செல்ல உள்ளதாகவும் நாசா குறிப்பிட்டுள்ளது. இன்று மற்றும் நாளை மட்டும் சுமார் 5 விண்கற்கள் பூமியைக் கடந்து செல்ல உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து