எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : முதல்வரின் வரலாற்று சிறப்புமிக்க மகத்தான சாதனைகளை ஒவ்வொரு அம்மா பேரவை தொண்டனும் மக்களிடத்தில் எடுத்துச் செல்லும் புனிதப் பணியில் ஈடுபட உறுதியேற்போம் என அ.தி.மு.க. அம்மா பேரவை சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதுரை புறநகர் திருமங்கலத்தில் அம்மா பேரவையின் சார்பில் பொதுமக்களுக்கு முக கவசம், மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கீழ்கண்ட தீர்மானத்தை அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் நிறைவேற்றியதாவது;
இந்த இயக்கம் இன்னும் 100 ஆண்டுகள் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று புரட்சித்தலைவி அம்மா சட்டமன்றத்தில் லட்சியம் முழுக்கம் இட்டதை தனது வேதவாக்காக எண்ணி அம்மாவின் வழியில் பொற்கால ஆட்சியை நடத்தி 100 ஆண்டுகள் அல்ல இன்னும் 200 ஆண்டுகள் ஆனாலும் தாய் தமிழகத்தில் கழகம் தான் ஆட்சி செய்யும் என்ற சிறப்பு உருவாக்கித் தந்து மட்டுமல்லாது.
இந்திய பொருளாதாரத்தில் முன்னணியில் 27 சதவீத பங்கு தமிழகம், பஞ்சாப், கேரளா, ஹரியானா, கர்நாடகா என 5 மாநிலங்களின் பங்கு மகத்தானது என்று கூறப்பட்டுள்ளது இதில் முதன்மையாக அயராத உழைப்பால் தமிழகத்தை முதன்மை மாநிலமாக உயிர்தந்து மட்டுமல்லாது. இந்த கொரோனா நோய் தடுப்பு பணியில் இந்திய தேசமே பாராட்டும் வகையில் நோய் தடுப்பில் முதன்மை மாநிலமாகவும், குணமடைந்தோர் பட்டியலில் முதன்மை மாநிலமாகவும்,. இறப்பு சதவீதத்தில் குறைந்த மாநிலமாகவும் ,மருத்துவ பரிசோதனையில் அதிகமுள்ள மாநிலமாகவும் உருவாக்கித் தந்தது மட்டுமில்லாது, 3,280 கோடி ரூபாய் மதிப்பில் மக்களுக்கு 1000 ரூபாய் நிவாரண தொகை தொடர்ந்து மூன்று மாதங்களாக அரிசி, பருப்பு ,எண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை 2 கோடியே ஒரு லட்சம் குடும்பங்களுக்கு விலையில்லாமல் வழங்கியது மட்டுமல்லாது, 35 லட்சம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கியும், அதனைத் தொடர்ந்து 37 வருவாய் மாவட்டங்களில் கட்டுப்பாடு அறை அமைத்து மக்களுக்கு தேவையான உதவி செய்தும், அம்மா உணவகம் மூலம் தமிழகம் முழுவதும் தினந்தோறும் ஏழு லட்சம் ஏழை எளிய மக்களை பயனடைய செய்தும், சமுதாய கூடங்களில் மூலம் தினந்தோறும் இரண்டு லட்சம் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி எங்கேயும் பசியில்லாத நிலையை உருவாக்கி ,தமிழக மக்களின் அட்சய பாத்திரமாக முதலமைச்சர் திகழ்ந்து வருகிறார். இந்த 3 மாத தடை காலத்திலும் நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளுக்கு தேவையான அடிப்படை தேவைகளை செய்துகொடுத்து அதன் மூலம் விவசாயிகள் மகசூலை இரண்டு மடங்கு அதிகரித்து அதன்மூலம் ஒவ்வொரு விவசாயிகளின் பாதுகாவலராக முதல்வர் திகழ்ந்து வருகிறார்.
அதேபோல் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரங்கராஜன் தலைமையில் குழு அமைத்தும், தலைமைச் செயலாளர் தலைமையில் டாஸ்போட்ஸ் என்ற குழுவை அமைத்தும், தமிழகத்தை வல்லரசு நாடுகளுக்கு இணையாக வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல பொருளாதார ஞானியாக முதல்வர் திகழ்ந்து வருகிறார். அதேபோல் சிறு, குறு தொழில் நிறுவனங்களை தொடர்ந்து மீண்டும் இயங்க நடவடிக்கை எடுத்து மட்டுமல்லாது பல்வேறு பெரிய நிறுவனங்களையும் தமிழகத்திற்கு தொழில் துவங்க கடிதம் எழுதி இதில் தொழில் முதலீட்டார்கள் என்னை சந்திக்க விரும்பினால் தொடர்பு கொள்ளும் 24 நேரத்திற்குள் என்னை சந்திக்கலாம் என்று தொழில்மூதலீட்டர்களை ஊக்கப்படுத்தி உள்ளார் மேலும் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் தனி கவனம் செலுத்தி பல்வேறு அறிவுரை வழங்கி வருகிறார்.
இன்றைக்கு இந்த மூன்று மாத காலத்தில் மக்களுக்கு தேவையான அரிசி ,பருப்பு, காய்கறி போன்ற அத்தியாவசிய பொருள்கள் அனைத்தையும் தங்குதடையின்றி கிடைக்கச் செய்து மக்கள் போற்றும் நல்லரசாக அம்மாவின் அரசு திகழ்ந்து வருகிறது. ஆனால் இன்றைக்கு மக்களை திசை திருப்பும் வேலையாக மட்டும் கடமையாக எண்ணி குழப்பத்தை ஏற்படுத்தி வரும் ஸ்டாலினுக்கு மக்கள் பணி மறந்து பல வருடம் ஆகிவிட்டது ஆகையால் மக்களும் இவரை மறந்து பல வருடம் ஆகிவிட்டது. மக்களின் இதயங்களில் இருப்பவர் நமது முதலமைச்சர் தான் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள மனமில்லாத ஸ்டாலின் ஆதாரம் ,அடிப்படை இல்லாமல் பல்வேறு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார் ஆனால் ஸ்டாலின் நாடகத்தை பார்த்து ரசிக்க ஆளில்லை என்று உலகச் செய்தியாக ஆகி இருக்கிறது.
ஆகவே ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் சுயநலமின்றி, ஊண் உறக்கம் இல்லாமல், மக்கள் சேவையே மகேசன் சேவை என்று அண்ணா காட்டிய வழியில், தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் என்று புரட்சித்தலைவரின் இலக்கணத்திற்கு உயிர் கொடுத்து, நிர்வாகம் அனுபவம் வாய்ந்த சாமானியர் கையாளும் போது திறமை வெளிப்படும் என்று நம்மிடம் பார்த்திருக்கிறோம். ஆனால் இரும்பு தேசத்தின் கரும்பு மனிதர் மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களின் திடமான, உறுதியான, தொலைநோக்கு சிந்தனையோடு, தீர்க்கதரிசனமான நடவடிக்கை இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களுக்கும் பாடமாக அமைந்து வருகிறது என்று முதல்வரை தாய் நாட்டு மக்கள் மனதார பாராட்டி, வாயாரப் புகழ்ந்து வருகின்றனர்.
இது போன்ற வரலாற்று சிறப்புமிக்க முதல்வரின் மகத்தான சாதனை திட்டங்களை மக்களிடத்தில் ஒவ்வொரு அம்மா பேரவை தொண்டனும் எடுத்துச் சொல்வோம் என்று அம்மா பேரவையின் சார்பில் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் அம்மா பேரவை இணைச் செயலாளர் இளங்கோவன், அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல் ,மதுரை மாநகர மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ் எஸ் சரவணன் எம்எல்ஏ ,புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கேதமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், மாவட்ட துணை செயலாளர் அய்யப்பன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திருப்பதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை3 days 1 min ago |
ஆப்பிள் பான் கேக்5 days 1 hour ago |
சிக்கன் மிளகு வறுவல்1 week 3 days ago |
-
தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி: தமிழகத்தில் ஏப்ரல் 13-ம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வி துறை திட்டம்
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு எதிரொலியாக, தமிழகத்தில் ஏப்ரல், 13க்குள் அனைத்து தேர்வுகளையும் நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டு உள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறை நீட்டிப்பு
18 Mar 2024சென்னை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் படங்களுக்கு மலர்கள் தூவி பிரதமர் அஞ்சலி
18 Mar 2024கோவை, கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி நேற்று மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார்.
-
தி.மு.க. கூட்டணியில் கொ.ம.தே.க. நாமக்கல் தொகுதி வேட்பாளர் பெயர் அறிவிப்பு
18 Mar 2024சென்னை, தி.மு.க. கூட்டணியில் கொ.ம.தே.க. சார்பில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி: புடினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
18 Mar 2024புதுடெல்லி, ரஷ்ய கூட்டமைப்பின் அதிபராக விளாடிமிர் புதின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக என்னுடைய வாழ்த்துகள் என பிரதமர் மோடி எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
-
திருப்பூரில் சுப்புராயன், நாகையில் செல்வராஜ்: இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு
18 Mar 2024சென்னை : தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
-
மகளிர் ஐ.பி.எல்.லில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஆர்.சி.பி.
18 Mar 2024புதுடெல்லி : மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் டெல்லி அணியை வீழ்த்தி பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
-
அணியுடன் இணைந்தார் கோலி
18 Mar 20242024ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது.
-
சென்னையில் நடக்கவிருக்கும் சி.எஸ்.கே. - ஆர்.சி.பி. போட்டிக்கான டிக்கெட் சில நிமிடங்களில் விற்றன
18 Mar 2024சென்னை : சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் தொடக்க போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் ஆன்லைனில் தொடங்கியவுடன் விற்று தீர்ந்தன.
-
மதுபான கொள்கை வழக்கில் கைது: சந்திரசேகர ராவின் மகள் கவிதா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்
18 Mar 2024புதுடெல்லி : மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சந்திரசேகர ராவின் மகள் கவிதா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
ரோகித் கேப்டனாக இல்லாதது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது : மும்பை அணி புதிய கேப்டன் ஹர்திக் கருத்து
18 Mar 2024மும்பை : ரோகித் கேப்டனாக இல்லாதது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்று மும்பை அணயின் புதிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 19-03-2024.
19 Mar 2024 -
சித்திரை திருவிழாவிற்காக மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பந்தல் போடும் பணி துவக்கம்
19 Mar 2024மதுரை : மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 12-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
மன்னர் சார்லஸ் இறந்ததாக வெளியான செய்தி வதந்தி இங்கிலாந்து தூதரகம் அறிக்கை
19 Mar 2024லண்டன், மன்னர் சார்லஸ் இறந்ததா வெளியான செய்தி வதந்தியே என்று இங்கிலாந்து தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் ராகுல் காந்தி விரைவில் பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
19 Mar 2024சென்னை : தமிழகம் புதுவையில் இண்டியா கூட்டணி வேட்பாளர்கள் 40 பேரையும் ஆதரித்து ராகுல் காந்தி சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந
-
ஜார்கண்ட் முன்னாள் முதல்வரின் உறவினர் பா.ஜ.க.வில் இணைந்தார்
19 Mar 2024ராஞ்சி, ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஷிபு சோரனின் மகன் துர்கா சோரனின் மனைவி சீதா சோரன் டெல்லியில் உள்ள பா.ஜ.க.
-
வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது: சென்னையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கும் தி.மு.க அழைப்பு
19 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.
-
தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு: தமிமுன் அன்சாரி அறிவிப்பு
19 Mar 2024சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.
-
மதுபான முறைகேடு வழக்கு: மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் ஏப். 6-ம் தேதி வரை நீட்டிப்பு
19 Mar 2024புது டெல்லி, மதுபான முறைகேடு வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
பிரேசிலில் சுட்டெரிக்கும் வெப்பம்: கடற்கரைகளில் தஞ்சம் அடையும் பொதுமக்கள்
19 Mar 2024ரியோ டி ஜெனிரோ, பிரேசிலில் கடும் வெப்பம் வாட்டி வதைப்பதால் உஷ்ணத்தை தணிக்க கடற்கரைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
-
டெல்லியில் அமித்ஷாவுடன் ராஜ் தாக்கரே சந்திப்பு
19 Mar 2024புது டெல்லி, மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, டெல்லியில் நேற்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது பா.ஜ.க.
-
தமிழகத்தில் இன்று முதல் 23-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
19 Mar 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் 23-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகளில் போட்டியிடும் வி.சி.க. வேட்பாளர்கள் அறிவிப்பு
19 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலில் சிதம்பரத்தில் திருமாவளவனும், விழுப்புரத்தில் ரவிக்குமாரும் பானை சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
-
ரபா மீது தாக்குதல் நடத்த திட்டம்: நெதன்யாகுவிடம் கவலை தெரிவித்த அதிபர் பைடன்
19 Mar 2024வாஷிங்டன், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், அமெரிக்க அதிபர் ஜோபைடன் டெலிபோன் மூலம் பேசியுள்ளார்.
-
முடிவுக்கு வந்தது நெகட்டிவ் விகிதம்: 17 ஆண்டுகளுக்கு பின் வட்டி விகிதத்தை உயர்த்தி ஜப்பான் மத்திய வங்கி அறிவிப்பு
19 Mar 2024டோக்கியோ, எதிர்மறை வட்டி விகிதங்கள் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு ஜப்பானின் மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்