முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நைஜீரியாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 60 பேர் பலி

திங்கட்கிழமை, 15 ஜூன் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

நைஜர் : நைஜீரியாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களில் 40 பேர் உயிரிழந்தனர். 

நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தில் போகோஹராம் பயங்கரவாதிகள் இருவேறு இடங்களில் தாக்குதல் நடத்தினர். இதில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 20 வீரர்கள் கொல்லப்பட்டனர். மற்றொரு இடத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்கள் 40 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதற்கு ஐ.நா.கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பாக மோங்குனோ மற்றும் நங்கன்சாய் போன்ற இடங்களில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் 81 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தத் தாக்குதல் நடந்திருக்கலாம் என அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து