முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லடாக் எல்லை விவகாரம்: பேச்சு நடத்த இந்தியாவுக்கு சீனா அழைப்பு

புதன்கிழமை, 17 ஜூன் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

பெய்ஜிங் : லடாக் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு வருமாறு இந்தியாவுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறி இருப்பதாவது:-

லடாக் எல்லை தொடர்பான விவகாரங்களை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க இந்தியா முன் வர வேண்டும். இந்தியாவுடன் தூதரக அதிகாரிகள் மூலமாகவும் ராணுவ அதிகாரிகள் மூலமாகவும் சீனா தொடர்பு கொண்டுள்ளது.லடாக் எல்லையில் மேலும் மோதல்கள் ஏற்படுவதை விரும்பவில்லை.

இந்தியா தனது முன்னணி ராணுவத்தை கண்டிப்பாக ஒழுங்குபடுத்தவும், மீறல் மற்றும் ஆத்திரமூட்டும் செயல்களை நிறுத்தவும், சீனாவுடன் இணைந்து செயல்படவும், உரையாடல் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் வேறுபாடுகளை தீர்ப்பதற்கான சரியான பாதையில் திரும்பி வரவும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம் என கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து