முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெற்கு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப்., வீரர், 5 வயது குழந்தை மரணம்

வெள்ளிக்கிழமை, 26 ஜூன் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

ஸ்ரீநகர் : தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பிஜ்பெஹாரா என்ற பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப் வீரர் ஒருவரும், 5 வயது குழந்தை ஒன்றும் உயிரிழந்தனர்.

நேற்று (ஜூன் 26) பிற்பகல் 12:10 மணியளவில் சி.ஆர்.பி.எப்.,பின் 90-வது பட்டாலியன் படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் அனந்த்நாக் மாவட்டத்தில் பிஜ்பெஹாரா என்ற பகுதியில் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் சி.ஆர்.பி.எப்., வீரர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் வீரர் ஒருவரும், 5 வயது குழந்தையும் படுகாயமடைந்தனர். அவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் உயிரிழந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து