முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம் : 4.4 ரிக்டர் அளவாக பதிவு

சனிக்கிழமை, 27 ஜூன் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஹன்லே பகுதியில் நேற்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹன்லேயில் இருந்து வடகிழக்கில் 332 கிமீ தொலைவில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 அலகாக பதிவாகியிருந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டுமானங்கள் அதிர்ந்தன.

இதனால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறினர். நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல் வெளியாகவில்லை.  நிலநடுக்கத்தின் தாக்கம் காரணமாக அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தானிலும் நில அதிர்வு உணரப்பட்டது. 

இந்த பிராந்தியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கார்கில் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து