முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை பெண் போலீஸ் அதிகாரிக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பாராட்டு

திங்கட்கிழமை, 29 ஜூன் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னை அயனாவரம் அருகே உள்ள ஓட்டேரி எஸ்.வி.எம்., நகர் வேலூரை சார்ந்த மூன்று சகோதரிகள் குப்பை பொறுக்கும் வேலையை செய்து விட்டு பிளாட்பாரத்தில் தங்கி இருந்தனர். இவர்களில் 57 வயது பிரபாவதி என்ற பெண் கடந்த வாரம் பிளாட்பாரத்திலேயே இறந்து போனார்.  கொரோனா வைரஸ் வறுமையால் பாதிக்கப்பட்டு இருந்த சகோதரிகள் பிரபாவதியை அடக்கம் செய்ய முடியாமல் தவித்தனர்.

பொதுமக்களும் கொரோனவுக்கு பயந்து அந்த இடத்திற்கு யாரும் போகவில்லை. அதுபற்றி தகவலறிந்த தலைமை செயலக காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரபாவதி உடலுக்கு காரிய சடங்குகளை செய்து மயானத்தில் அடக்கம் செய்தனர். 

இந்த நிலையில் நேற்று தலைமை செயலக காலனியில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு முகாமிற்கு வருகை தந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், இன்ஸ்பெக்டர் ராஜேஷ்வரியின் மனிதநேயத்தை பாராட்டி மரியாதை செய்தார். அப்போது அவருடன் ஐ.ஏ.எஸ். ஆதிகாரி டாக்டர்.அருண்தம்புராஜ், ஐ.பி.எஸ்.அதிகாரி ஜெயலட்சுமி, மண்டல உதவிஆணையர் நாராயணன் உட்பட பலர் உடனிருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து