முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு

செவ்வாய்க்கிழமை, 30 ஜூன் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

உலக முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிவேகமாக பரவி வருகிறது. இந்த நோய் தொற்றில் இருந்து பொதுமக்களை காப்பாற்றுவதற்காக மத்திய, மாநில அரசுகள் இணைந்து செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நோய் தொற்று பரவாமல் இருக்க பல வழிகளில் அரசு நடவடிக்கை எடுக்கு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது.

இந்தியா முழுவதும், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசு தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசும் தமிழகம் முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது. இதைத் தொடர்ந்து கொரோனா தொற்றின் நிலைமையை கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து கொரோனாவின் தாக்கம் குறைவும் என்று அனைவரும் எதிர்ப்பார்த்த நிலையில் நாளுக்கு நாள் கொரோவாவின் பாதிப்பு அதிகரித்து கொண்டே இருந்தது. 

இதனை தொடர்ந்து 5 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 5-வது ஊரடங்கு நேற்று முடிவடைந்த நிலையில் நேற்று முன்தினம் தமிழக அரசு 6-வது முறையாக ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சரி செய்ய மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல முறை ஆலோசனை மேற்கொண்டு இந்த ஊரடங்கு உத்தரவை ஜூலை 31-ம் தேதி வரை நீட்டித்தார்.

இதற்கான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து