முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

செவ்வாய்க்கிழமை, 30 ஜூன் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் நேற்று நடந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பதுங்கியிருந்து நாசவேலைக்கு திட்டமிடும் பயங்கரவாதிகளை ஒழிக்க ராணுவம், உள்ளூர் போலீஸ் இணைந்த கூட்டுப்படை தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. கடந்த சில தினங்களாக நடந்த தேடுதல் வேட்டையின்போது பல்வேறு முக்கிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், அனந்த்நாக் மாவட்டம் வாகாமா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் நேற்று காலை அப்பகுதிக்கு சென்று பயங்கரவாதிகளை சுற்றி வளைத்தனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். 

ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டு மட்டும் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த மாதம் மட்டும் 46 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஹிஜ்புல் முஜாகிதீன் கமாண்டர் என்று அழைக்கப்படும் மசூத் அகமது நேற்று முன்தினம் நடந்த என்கவுண்டரில் கொல்லப்பட்டதையடுத்து, தோடா மாவட்டம் பயங்கரவாதிகள் இல்லாத மாவட்டமாக மாறியிருப்பதாக ஜம்மு காஷ்மீர் காவல்துறை தலைவர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து