முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் கே.பி.அன்பழகனின் உடல்நிலை சீராக உள்ளது : மருத்துவமனை அறிக்கையில் தகவல்

செவ்வாய்க்கிழமை, 30 ஜூன் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு 2-வது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனியார் மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவரது உடல் நிலை சீராக உள்ளதாகவும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தனியார் மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அமைச்சர் கே.பி.அன்பழகன் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில், சிகிச்சைக்காக நேற்று முன்தினம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. 

அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று ஆரம்ப நிலையில் இருந்ததால், வீட்டுக்கு சென்று தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சையை தொடரலாம் என கேட்டு கொண்ட போதும், அவர் ஆஸ்பத்திரியிலேயே தங்கி சிசிச்சை பெற விருப்பம் தெரிவித்ததாக கூறப்பட்டது. இந்தசூழலில் தனியார் மருத்துவமனையில் அவருக்கு டாக்டர்கள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை அளித்து வருகின்றனர்.  

இந்நிலையில் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு 2-வது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனியார் மருத்துவமனை தெரிவித்துள்ளது. மேலும் அவரது உடல் நிலை சீராக உள்ளதாகவும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தனியார் மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து