முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவாலான இந்த காலகட்டத்தில் தேசத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும் மருத்துவர்கள் : மத்திய அமைச்சர் அமித்ஷா பாராட்டு

புதன்கிழமை, 1 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : மருத்துவர்கள் தினத்தையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மருத்துவர்களுக்கு நன்றிகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துள்ளார்

மருத்துவர்கள் நாளான நேற்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பகிர்ந்துள்ள டுவிட்டர் பதிவு ஒன்றில் கூறியிருப்பதாவது, 

கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் நின்று பணியாற்றிய, துணிச்சலான இந்திய மருத்துவர்களுக்கு நன்றி.  சவாலான இந்தக் காலகட்டத்தில், தேசத்தைப் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதில் மருத்துவர்கள் காட்டிய அதிகபட்ச உறுதி உண்மையிலேயே உன்னதமானது.

மருத்துவர்கள் நாளன்று, தேசம், அவர்களது ஈடுபாட்டிற்கும், தியாகத்திற்கும் மரியாதை செலுத்துகின்றனர். மனித குலத்திற்கு பணியாற்றுவதற்காக, 24 மணி நேரமும், சுயநலமின்றி, உழைத்துக் கொண்டிருக்கும் நமது மருத்துவர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஒன்றுபட்டு நிற்கும். நெருக்கடியான தருணங்களில், தமது முழு ஒத்துழைப்பையும், தார்மீக ஆதரவையும், அளித்து வரும் மருத்துவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் நன்றி.

இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து