முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை புதிய காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்

புதன்கிழமை, 1 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னையின் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மாற்றப்பட்டுள்ள நிலையில், புதிய காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னையின் கூடுதல் ஆணையர் உள்ளிட்ட பல பொறுப்புகளில் இருந்துள்ளார்.

சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் 15-ம் தேதி பதவி ஏற்று, மூன்றாண்டுகளை நிறைவு செய்தார். இந்நிலையில் புதிய காவல் ஆணையராக செயலாக்கப் பிரிவு ஏ.டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் (48) நியமிக்கப்பட்டுள்ளார். மகேஷ்குமார் அகர்வால் 1994-ம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். இவர் சட்டம் பயின்றவர். சொந்த மாநிலம் பஞ்சாப் ஆகும். தந்தையும் வழக்கறிஞர் என்பதால் சட்டம் பயின்று பின்னர் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி 22 வயதில் ஐ.பி.எஸ். அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.

தேனி எஸ்.பி., தூத்துக்குடி எஸ்.பி., 2001-ல் சென்னை பூக்கடை துணை ஆணையர், சென்னை போக்குவரத்து காவல் தெற்கு துணை ஆணையர் என பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர் பின்னர் சொந்த மாநிலமான பஞ்சாப் மாநிலத்தில் சி.பி.ஐ. எஸ்.பி.யாக அயல்பணியில் சென்றார்.  7 ஆண்டுகள் சி.பி.ஐ. அதிகாரியாக பஞ்சாப், அரியானா, ஜம்மு காஷ்மீரில் பணியாற்றியுள்ளார். பின்னர் ஐ.ஜி.யாக பதவி உயர்வுபெற்று தமிழகம் திரும்பிய அவர், சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி.யாகப் பதவி வகித்தார்.

பின்னர் மதுரை காவல் ஆணையராகச் சென்றார். மீண்டும் சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி.யாகப் பதவி ஏற்றார். பின்னர் சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராகப் பொறுப்பேற்றார். பின்னர் செயலாக்கப் பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக இருந்த அவர் தற்போது சென்னையின் இளம் காவல் ஆணையராகப் பொறுப்பேற்றுள்ளார். மகேஷ்குமார் அகர்வாலுக்குத் திருமணமாகி மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். மனைவி துணைப் பேராசிரியராக சென்னையில் பணியாற்றுகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து