முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர்ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் அம்மா பேரவை சார்பில் 5 லட்சம் குடும்பங்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி வாழும் தன்வந்திரியாக முதல்வர் திகழ்கிறார் : புகழாரம் சூட்டும் அனைத்து தரப்பு மக்கள்

புதன்கிழமை, 1 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : 3000 ஆண்டுகளுக்கு முன்பு யுகி சித்தரால் உருவாக்கப்பட்ட கபசுர குடிநீரை தீர்க்க தரிசனமாக மக்களுக்கு வழங்கி, வாழும் தன்வந்திரியாக முதல்வர் திகழ்ந்து வருகிறார் என்று அனைத்து தரப்பு மக்களும் பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர். 

கடந்த நான்கு மாதங்களாக உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த கொடிய வைரஸ் நோயால் இதுவரை ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு இதில் 5 லட்சம் மேற்ப்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர். இந்த வைரஸ் நோயை குணப்படுத்தும் மருந்தினை கண்டுபிடிக்க சீனாவில் 49 முறை ஆய்வும், அமெரிக்காவில் 50 முறை ஆய்வும், பிரிட்டனில் 10முறை ஆய்வும், ஜெர்மனியில்13 முறை ஆய்வும் தொடர்ந்து இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் 3000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த யுகி என்ற சித்தர், மனிதருக்கு வரும் 64 வகையான காய்ச்சலுக்கு அப்பொழுது இதற்குரிய சித்த மருத்துவத்தை கண்டுபிடித்துள்ளார். அதில் ஒன்றுதான் இந்த கபசுரக் குடிநீர் ஆகும். 

இந்தக் கபசுர குடிநீரில் சுக்கு, திப்பிலி, லவங்கம், சிறுகாஞ்சொறிவேர், அக்காரம், முள்ளிவேர், கடுக்காய்தோல், ஆடாதொடாஇலை, கற்பூரவள்ளி இலை, கோஷ்டம், சிறுதேக்கு, நிலவேம்பு சமூலம், வட்டத்திருப்பிவேர், கோரைக்கிழங்கு என 15 வகை மூலிகைகளை 35 கிராம் எடுத்து முறைப்படி எடுத்து சுத்தம் செய்து இடித்து இதை பொடி செய்துள்ளனர்.  இதுமட்டுமல்ல நிமோனியா, பன்றிக்காய்ச்சலுக்கு கூட இந்தக் கபசுர குடிநீர் சிறந்த மருத்துவமாக திரும்புகிறது. இந்த மருந்து இருமல், சளி, சுவாசப்பாதை ஆகியவற்றில் உள்ள தொற்றுநோயை எளிதில் குணப்படுத்தி விடும். இந்த மருந்தைப் பற்றி சிந்தாமணியில் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒட்டு மொத்த மனித குலத்தைக் காக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்த இந்த கபசுரக் குடிநீரை முதல்வர் தனது திருக்கரங்களால் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி அ.தி.மு.க. அம்மா பேரவை சார்பில் மாநில  அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள காவல்துறையினர், மருத்துவத் துறையினர், வருவாய்த்துறையினர், உள்ளாட்சி துறையினர், பொதுப்பணித்துறையினர் என்று அனைத்து அரசு தரப்பினருக்கும் மேலும் நகர மற்றும் கிராம பகுதியில் வாழும் அனைத்து மக்களுக்கும் அவர்கள் வசிக்கும் இடத்திற்கு சென்று கபசுர குடிநீரை வழங்கி வருகிறார். 

இதில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது: 

மனித இனத்தை அழிக்கும் இந்த கொடிய வைரஸ் நோயிலிருந்து மக்களை காக்கும் வண்ணம் நமது முதல்வர் போர்க்கால அடிப்படையில் இரவு பகல் பாராது தொடர்ந்து மக்களுக்காக உழைத்து வருகிறார்.  ஜனவரி மாதமே இந்த நோயின் தாக்கத்தை முன்கூட்டியே நமது முதல்வர்  தீர்க்கதரிசனமாக அறிந்து பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதால் இன்றைக்கு தமிழகத்தில் இறப்பு சதவீதம் மிகவும் குறைவுதான்.  அதுமட்டுமல்லாது மக்களுக்கு இந்த நோயிலிருந்து விடுபடவும் நோய் எதிர்ப்பு சக்தி அறிவிக்கவும் கடந்த ஏப்ரல் மாதம் 23-ம் தேதி இந்த கபசுரக் குடிநீர் வழங்கும் திட்டத்தினை முதல்வர் தனது பொற்கரங்களால் தொடங்கி வைத்தார் அதுமட்டுமல்லாது மத்திய அரசின் ஆயுஷ் என்ற அமைச்சகமும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இதை பயன்படுத்தலாம் என்று அறிவித்துள்ளது. 

முதல்வர் மற்றும் துணை முதல்வர் வழிகாட்டுதல் படி அம்மா பேரவை சார்பில் கபசுர குடிநீர் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் 35 லட்சம் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதில் அனைவருக்கும் இதை வழங்குவதுதான் நோக்கமாகும். இதுவரை 5 லட்சம் குடும்பங்களுக்கு இந்தக் கபசுர குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையில் தொடர்ந்து வழங்கி வருகிறோம்.

மக்களும் இதை வாங்கி பயன் பெற்று வருகின்றனர். மேலும் மக்களாகிய நீங்கள் இந்த கபசுர குடிநீர் பருகுவது மட்டும்மட்டுமல்லாது முதல்வர் அறிவுரையான முககவசம்அணிய வேண்டும். கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் இது நீங்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அப்படி செய்தால் இந்த தொற்று நோயிலிருந்து உங்களை காத்துக் கொள்ளலாம் என்று கூறினார்.

இது குறித்து பெண் காவலர் ஒருவர் கூறுகையில்,  இன்றைக்கு நாட்டையே அச்சுறுத்தும் இந்த கொடிய வைரஸ் நோயிலிருந்து மக்களைக் காக்கும் புனித பணியில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வரை எங்கள் காவல்துறையினர் எல்லாம் ஈடுபட்டு வருகின்றனர்.  நாங்கள் குடும்பத்தை மறந்து இந்த பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

இதுபோன்ற நேரங்களில் இந்த நோயில் இருந்து எங்களை காப்பாற்ற பல்வேறு அறிவுரைகளை முதல்வரும், காவல்துறை உயர் அதிகாரி எங்களுக்கு வழங்கி வருகின்றனர். தற்பொழுது பணியிலிருக்கும் எங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த கபசுர குடிநீர் வழங்கப்பட்டு உள்ளது. தற்பொழுது இதை நான் தொடர்ந்து அருந்துவது மட்டுமல்லாது என் குடும்பத்தினர் அருந்துகின்றனர். இதன் மூலம் எனக்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டு உள்ளது. எங்கள் நலனில் அக்கறை கொண்டு இதை வழங்கிய முதல்வருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

தூய்மைப் பணியாளர் பேச்சி கூறுகையில், கடந்த நான்கு மாதங்களாக இந்தப் பணியில் ஈடுபட்டு வருகிறோம் எங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பல்வேறு மருந்துகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் தினந்தோறும் மூன்று வேளை அருந்துகிறோம். இதன் மூலம் தொற்றுநோயிலிருந்து நாங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறோம். இதனை வழங்கிய முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினார். 

ராமு என்பவர் கூறுகையில், மிகவும் பழமை வாய்ந்த சித்த மருத்துவம் என்று கூறப்பட்டு வருகிறது. பொதுவாக வீட்டில் நலம் இல்லை என்றால் தன்வந்திரி ஹோமம் வீட்டில் செய்வார்கள். அதுபோல இன்றைக்கு தமிழகத்தில் இருக்கும் மக்களை காக்கும் வண்ணம் இதுபோன்ற மருந்துகளை வழங்கி வரும் நமது முதல்வர் தன்வந்திரியின் மறு உருவம் என்று கூறினார். 

பாண்டிஸ்வரி என்பவர் கூறியதாவது;  எங்களைப் போன்ற 60 வயதை கடந்தவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி என்பது மிகவும் அவசியம். தற்பொழுது இந்த நோயிலிருந்து எங்களைப் பாதுகாத்திட முதல்வர் ஆணைப்படி அமைச்சர் உதயகுமார் எங்களுக்கு வழங்கியுள்ளார். நாங்கள் தினந்தோறும் இதை அருந்துகிறோம். இதன் மூலம் நான் ஆரோக்கியமாக உள்ளேன். இதை வழங்கிய முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து