எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : 3000 ஆண்டுகளுக்கு முன்பு யுகி சித்தரால் உருவாக்கப்பட்ட கபசுர குடிநீரை தீர்க்க தரிசனமாக மக்களுக்கு வழங்கி, வாழும் தன்வந்திரியாக முதல்வர் திகழ்ந்து வருகிறார் என்று அனைத்து தரப்பு மக்களும் பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த நான்கு மாதங்களாக உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த கொடிய வைரஸ் நோயால் இதுவரை ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு இதில் 5 லட்சம் மேற்ப்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர். இந்த வைரஸ் நோயை குணப்படுத்தும் மருந்தினை கண்டுபிடிக்க சீனாவில் 49 முறை ஆய்வும், அமெரிக்காவில் 50 முறை ஆய்வும், பிரிட்டனில் 10முறை ஆய்வும், ஜெர்மனியில்13 முறை ஆய்வும் தொடர்ந்து இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் 3000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த யுகி என்ற சித்தர், மனிதருக்கு வரும் 64 வகையான காய்ச்சலுக்கு அப்பொழுது இதற்குரிய சித்த மருத்துவத்தை கண்டுபிடித்துள்ளார். அதில் ஒன்றுதான் இந்த கபசுரக் குடிநீர் ஆகும்.
இந்தக் கபசுர குடிநீரில் சுக்கு, திப்பிலி, லவங்கம், சிறுகாஞ்சொறிவேர், அக்காரம், முள்ளிவேர், கடுக்காய்தோல், ஆடாதொடாஇலை, கற்பூரவள்ளி இலை, கோஷ்டம், சிறுதேக்கு, நிலவேம்பு சமூலம், வட்டத்திருப்பிவேர், கோரைக்கிழங்கு என 15 வகை மூலிகைகளை 35 கிராம் எடுத்து முறைப்படி எடுத்து சுத்தம் செய்து இடித்து இதை பொடி செய்துள்ளனர். இதுமட்டுமல்ல நிமோனியா, பன்றிக்காய்ச்சலுக்கு கூட இந்தக் கபசுர குடிநீர் சிறந்த மருத்துவமாக திரும்புகிறது. இந்த மருந்து இருமல், சளி, சுவாசப்பாதை ஆகியவற்றில் உள்ள தொற்றுநோயை எளிதில் குணப்படுத்தி விடும். இந்த மருந்தைப் பற்றி சிந்தாமணியில் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒட்டு மொத்த மனித குலத்தைக் காக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்த இந்த கபசுரக் குடிநீரை முதல்வர் தனது திருக்கரங்களால் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி அ.தி.மு.க. அம்மா பேரவை சார்பில் மாநில அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள காவல்துறையினர், மருத்துவத் துறையினர், வருவாய்த்துறையினர், உள்ளாட்சி துறையினர், பொதுப்பணித்துறையினர் என்று அனைத்து அரசு தரப்பினருக்கும் மேலும் நகர மற்றும் கிராம பகுதியில் வாழும் அனைத்து மக்களுக்கும் அவர்கள் வசிக்கும் இடத்திற்கு சென்று கபசுர குடிநீரை வழங்கி வருகிறார்.
இதில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது:
மனித இனத்தை அழிக்கும் இந்த கொடிய வைரஸ் நோயிலிருந்து மக்களை காக்கும் வண்ணம் நமது முதல்வர் போர்க்கால அடிப்படையில் இரவு பகல் பாராது தொடர்ந்து மக்களுக்காக உழைத்து வருகிறார். ஜனவரி மாதமே இந்த நோயின் தாக்கத்தை முன்கூட்டியே நமது முதல்வர் தீர்க்கதரிசனமாக அறிந்து பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதால் இன்றைக்கு தமிழகத்தில் இறப்பு சதவீதம் மிகவும் குறைவுதான். அதுமட்டுமல்லாது மக்களுக்கு இந்த நோயிலிருந்து விடுபடவும் நோய் எதிர்ப்பு சக்தி அறிவிக்கவும் கடந்த ஏப்ரல் மாதம் 23-ம் தேதி இந்த கபசுரக் குடிநீர் வழங்கும் திட்டத்தினை முதல்வர் தனது பொற்கரங்களால் தொடங்கி வைத்தார் அதுமட்டுமல்லாது மத்திய அரசின் ஆயுஷ் என்ற அமைச்சகமும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இதை பயன்படுத்தலாம் என்று அறிவித்துள்ளது.
முதல்வர் மற்றும் துணை முதல்வர் வழிகாட்டுதல் படி அம்மா பேரவை சார்பில் கபசுர குடிநீர் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் 35 லட்சம் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதில் அனைவருக்கும் இதை வழங்குவதுதான் நோக்கமாகும். இதுவரை 5 லட்சம் குடும்பங்களுக்கு இந்தக் கபசுர குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையில் தொடர்ந்து வழங்கி வருகிறோம்.
மக்களும் இதை வாங்கி பயன் பெற்று வருகின்றனர். மேலும் மக்களாகிய நீங்கள் இந்த கபசுர குடிநீர் பருகுவது மட்டும்மட்டுமல்லாது முதல்வர் அறிவுரையான முககவசம்அணிய வேண்டும். கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் இது நீங்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அப்படி செய்தால் இந்த தொற்று நோயிலிருந்து உங்களை காத்துக் கொள்ளலாம் என்று கூறினார்.
இது குறித்து பெண் காவலர் ஒருவர் கூறுகையில், இன்றைக்கு நாட்டையே அச்சுறுத்தும் இந்த கொடிய வைரஸ் நோயிலிருந்து மக்களைக் காக்கும் புனித பணியில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வரை எங்கள் காவல்துறையினர் எல்லாம் ஈடுபட்டு வருகின்றனர். நாங்கள் குடும்பத்தை மறந்து இந்த பணியில் ஈடுபட்டு வருகிறோம்.
இதுபோன்ற நேரங்களில் இந்த நோயில் இருந்து எங்களை காப்பாற்ற பல்வேறு அறிவுரைகளை முதல்வரும், காவல்துறை உயர் அதிகாரி எங்களுக்கு வழங்கி வருகின்றனர். தற்பொழுது பணியிலிருக்கும் எங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த கபசுர குடிநீர் வழங்கப்பட்டு உள்ளது. தற்பொழுது இதை நான் தொடர்ந்து அருந்துவது மட்டுமல்லாது என் குடும்பத்தினர் அருந்துகின்றனர். இதன் மூலம் எனக்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டு உள்ளது. எங்கள் நலனில் அக்கறை கொண்டு இதை வழங்கிய முதல்வருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
தூய்மைப் பணியாளர் பேச்சி கூறுகையில், கடந்த நான்கு மாதங்களாக இந்தப் பணியில் ஈடுபட்டு வருகிறோம் எங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பல்வேறு மருந்துகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் தினந்தோறும் மூன்று வேளை அருந்துகிறோம். இதன் மூலம் தொற்றுநோயிலிருந்து நாங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறோம். இதனை வழங்கிய முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினார்.
ராமு என்பவர் கூறுகையில், மிகவும் பழமை வாய்ந்த சித்த மருத்துவம் என்று கூறப்பட்டு வருகிறது. பொதுவாக வீட்டில் நலம் இல்லை என்றால் தன்வந்திரி ஹோமம் வீட்டில் செய்வார்கள். அதுபோல இன்றைக்கு தமிழகத்தில் இருக்கும் மக்களை காக்கும் வண்ணம் இதுபோன்ற மருந்துகளை வழங்கி வரும் நமது முதல்வர் தன்வந்திரியின் மறு உருவம் என்று கூறினார்.
பாண்டிஸ்வரி என்பவர் கூறியதாவது; எங்களைப் போன்ற 60 வயதை கடந்தவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி என்பது மிகவும் அவசியம். தற்பொழுது இந்த நோயிலிருந்து எங்களைப் பாதுகாத்திட முதல்வர் ஆணைப்படி அமைச்சர் உதயகுமார் எங்களுக்கு வழங்கியுள்ளார். நாங்கள் தினந்தோறும் இதை அருந்துகிறோம். இதன் மூலம் நான் ஆரோக்கியமாக உள்ளேன். இதை வழங்கிய முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
ஆந்திர சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Apr 2024ஐதராபாத் : ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களை காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது.
-
நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
22 Apr 2024புதுடெல்லி : நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகளை ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கினார்.
-
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் வெற்றி: உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறிய தமிழக வீரர் குகேஷ்
22 Apr 2024ஒட்டோவா : கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 14-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான டி.குகேஷ் அபார வெற்றி பெற்றுள்ளார்.
-
விராட் கோலிக்கு அபராதம்
22 Apr 2024ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது.
-
அமெரிக்கா: விபத்தில் இந்திய மாணவர்கள் இருவர் உயிரிழப்பு
22 Apr 2024நியூயார்க் : அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பீனிக்ஸ் சிட்டி நகரில் கார் ஒன்றில் இந்திய மாணவர்கள் இருவர் பயணம் செய்தபோது, எதிர் திசையில் இருந்து விரைவாக வந்த மற்றொரு
-
நடிகர் ரஜினி பட தலைப்பு அறிவிப்பு
22 Apr 2024சென்னை : ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது படத்திலும் சன் பிக்சர்ஸ் மீண்டும் இணைகிறது.
-
இன்டியா கூட்டணி வென்றால் முழு ஆதரவு வழங்குவோம் : மேற்கு வங்க முதல்வர் மம்தா அறிவிப்பு
22 Apr 2024கொல்கத்தா : இன்டியா கூட்டணி வென்று மத்தியில் ஆட்சிக்கு வந்தால் முழு ஆதரவு தருவோம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது குஜராத்
22 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்றது.
-
கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தல்: வேட்புமனுக்களை வாபஸ் பெற அவகாசம் முடிந்தது
22 Apr 2024பெங்களூரு : கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுக்களை வாபஸ் பெற கால அவகாசம் நேற்றுடன் முடிந்தது.
-
பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி
22 Apr 2024புதுடில்லி : பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
-
கெஜ்ரிவாலின் உடல்நிலையை பரிசோதிக்க நிபுணர் குழு அமைக்க எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு கோர்ட் உத்தரவு
22 Apr 2024டெல்லி : கெஜ்ரிவாலின் உடல்நிலையை பரிசோதனை செய்ய நிபுணர் குழு அமைக்கும்படி டெல்லி எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பெங்களூரு, பஞ்சாப் அணி கேப்டன்களுக்கு அபராதம் : ஐ.பி.எல். நிர்வாகம் நடவடிக்கை
22 Apr 2024மும்பை : பெங்களூரு அணி கேப்டன் டு பிளெஸ்சிஸ், பஞ்சாப் அணி கேப்டன் சாம் கர்ரனுக்கு அபராதம் விதித்துள்ளது ஐ.பி.எல். நிர்வாகம்.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
ஐ.நா.,வில் இந்திய பெண் கீதாவுக்கு முக்கியப்பதவி
23 Apr 2024வாஷிங்டன், இந்தோனேஷியாவில், ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
இந்து கடவுள்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு
23 Apr 2024ஜெய்ப்பூர், ஹனுமன், ராமரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதிக்கிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.