எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : 3000 ஆண்டுகளுக்கு முன்பு யுகி சித்தரால் உருவாக்கப்பட்ட கபசுர குடிநீரை தீர்க்க தரிசனமாக மக்களுக்கு வழங்கி, வாழும் தன்வந்திரியாக முதல்வர் திகழ்ந்து வருகிறார் என்று அனைத்து தரப்பு மக்களும் பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த நான்கு மாதங்களாக உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த கொடிய வைரஸ் நோயால் இதுவரை ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு இதில் 5 லட்சம் மேற்ப்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர். இந்த வைரஸ் நோயை குணப்படுத்தும் மருந்தினை கண்டுபிடிக்க சீனாவில் 49 முறை ஆய்வும், அமெரிக்காவில் 50 முறை ஆய்வும், பிரிட்டனில் 10முறை ஆய்வும், ஜெர்மனியில்13 முறை ஆய்வும் தொடர்ந்து இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் 3000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த யுகி என்ற சித்தர், மனிதருக்கு வரும் 64 வகையான காய்ச்சலுக்கு அப்பொழுது இதற்குரிய சித்த மருத்துவத்தை கண்டுபிடித்துள்ளார். அதில் ஒன்றுதான் இந்த கபசுரக் குடிநீர் ஆகும்.
இந்தக் கபசுர குடிநீரில் சுக்கு, திப்பிலி, லவங்கம், சிறுகாஞ்சொறிவேர், அக்காரம், முள்ளிவேர், கடுக்காய்தோல், ஆடாதொடாஇலை, கற்பூரவள்ளி இலை, கோஷ்டம், சிறுதேக்கு, நிலவேம்பு சமூலம், வட்டத்திருப்பிவேர், கோரைக்கிழங்கு என 15 வகை மூலிகைகளை 35 கிராம் எடுத்து முறைப்படி எடுத்து சுத்தம் செய்து இடித்து இதை பொடி செய்துள்ளனர். இதுமட்டுமல்ல நிமோனியா, பன்றிக்காய்ச்சலுக்கு கூட இந்தக் கபசுர குடிநீர் சிறந்த மருத்துவமாக திரும்புகிறது. இந்த மருந்து இருமல், சளி, சுவாசப்பாதை ஆகியவற்றில் உள்ள தொற்றுநோயை எளிதில் குணப்படுத்தி விடும். இந்த மருந்தைப் பற்றி சிந்தாமணியில் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒட்டு மொத்த மனித குலத்தைக் காக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்த இந்த கபசுரக் குடிநீரை முதல்வர் தனது திருக்கரங்களால் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி அ.தி.மு.க. அம்மா பேரவை சார்பில் மாநில அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள காவல்துறையினர், மருத்துவத் துறையினர், வருவாய்த்துறையினர், உள்ளாட்சி துறையினர், பொதுப்பணித்துறையினர் என்று அனைத்து அரசு தரப்பினருக்கும் மேலும் நகர மற்றும் கிராம பகுதியில் வாழும் அனைத்து மக்களுக்கும் அவர்கள் வசிக்கும் இடத்திற்கு சென்று கபசுர குடிநீரை வழங்கி வருகிறார்.
இதில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது:
மனித இனத்தை அழிக்கும் இந்த கொடிய வைரஸ் நோயிலிருந்து மக்களை காக்கும் வண்ணம் நமது முதல்வர் போர்க்கால அடிப்படையில் இரவு பகல் பாராது தொடர்ந்து மக்களுக்காக உழைத்து வருகிறார். ஜனவரி மாதமே இந்த நோயின் தாக்கத்தை முன்கூட்டியே நமது முதல்வர் தீர்க்கதரிசனமாக அறிந்து பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதால் இன்றைக்கு தமிழகத்தில் இறப்பு சதவீதம் மிகவும் குறைவுதான். அதுமட்டுமல்லாது மக்களுக்கு இந்த நோயிலிருந்து விடுபடவும் நோய் எதிர்ப்பு சக்தி அறிவிக்கவும் கடந்த ஏப்ரல் மாதம் 23-ம் தேதி இந்த கபசுரக் குடிநீர் வழங்கும் திட்டத்தினை முதல்வர் தனது பொற்கரங்களால் தொடங்கி வைத்தார் அதுமட்டுமல்லாது மத்திய அரசின் ஆயுஷ் என்ற அமைச்சகமும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இதை பயன்படுத்தலாம் என்று அறிவித்துள்ளது.
முதல்வர் மற்றும் துணை முதல்வர் வழிகாட்டுதல் படி அம்மா பேரவை சார்பில் கபசுர குடிநீர் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் 35 லட்சம் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதில் அனைவருக்கும் இதை வழங்குவதுதான் நோக்கமாகும். இதுவரை 5 லட்சம் குடும்பங்களுக்கு இந்தக் கபசுர குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையில் தொடர்ந்து வழங்கி வருகிறோம்.
மக்களும் இதை வாங்கி பயன் பெற்று வருகின்றனர். மேலும் மக்களாகிய நீங்கள் இந்த கபசுர குடிநீர் பருகுவது மட்டும்மட்டுமல்லாது முதல்வர் அறிவுரையான முககவசம்அணிய வேண்டும். கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் இது நீங்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அப்படி செய்தால் இந்த தொற்று நோயிலிருந்து உங்களை காத்துக் கொள்ளலாம் என்று கூறினார்.
இது குறித்து பெண் காவலர் ஒருவர் கூறுகையில், இன்றைக்கு நாட்டையே அச்சுறுத்தும் இந்த கொடிய வைரஸ் நோயிலிருந்து மக்களைக் காக்கும் புனித பணியில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வரை எங்கள் காவல்துறையினர் எல்லாம் ஈடுபட்டு வருகின்றனர். நாங்கள் குடும்பத்தை மறந்து இந்த பணியில் ஈடுபட்டு வருகிறோம்.
இதுபோன்ற நேரங்களில் இந்த நோயில் இருந்து எங்களை காப்பாற்ற பல்வேறு அறிவுரைகளை முதல்வரும், காவல்துறை உயர் அதிகாரி எங்களுக்கு வழங்கி வருகின்றனர். தற்பொழுது பணியிலிருக்கும் எங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த கபசுர குடிநீர் வழங்கப்பட்டு உள்ளது. தற்பொழுது இதை நான் தொடர்ந்து அருந்துவது மட்டுமல்லாது என் குடும்பத்தினர் அருந்துகின்றனர். இதன் மூலம் எனக்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டு உள்ளது. எங்கள் நலனில் அக்கறை கொண்டு இதை வழங்கிய முதல்வருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
தூய்மைப் பணியாளர் பேச்சி கூறுகையில், கடந்த நான்கு மாதங்களாக இந்தப் பணியில் ஈடுபட்டு வருகிறோம் எங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பல்வேறு மருந்துகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் தினந்தோறும் மூன்று வேளை அருந்துகிறோம். இதன் மூலம் தொற்றுநோயிலிருந்து நாங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறோம். இதனை வழங்கிய முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினார்.
ராமு என்பவர் கூறுகையில், மிகவும் பழமை வாய்ந்த சித்த மருத்துவம் என்று கூறப்பட்டு வருகிறது. பொதுவாக வீட்டில் நலம் இல்லை என்றால் தன்வந்திரி ஹோமம் வீட்டில் செய்வார்கள். அதுபோல இன்றைக்கு தமிழகத்தில் இருக்கும் மக்களை காக்கும் வண்ணம் இதுபோன்ற மருந்துகளை வழங்கி வரும் நமது முதல்வர் தன்வந்திரியின் மறு உருவம் என்று கூறினார்.
பாண்டிஸ்வரி என்பவர் கூறியதாவது; எங்களைப் போன்ற 60 வயதை கடந்தவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி என்பது மிகவும் அவசியம். தற்பொழுது இந்த நோயிலிருந்து எங்களைப் பாதுகாத்திட முதல்வர் ஆணைப்படி அமைச்சர் உதயகுமார் எங்களுக்கு வழங்கியுள்ளார். நாங்கள் தினந்தோறும் இதை அருந்துகிறோம். இதன் மூலம் நான் ஆரோக்கியமாக உள்ளேன். இதை வழங்கிய முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை2 days 12 hours ago |
ஆப்பிள் பான் கேக்4 days 13 hours ago |
சிக்கன் மிளகு வறுவல்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 18-03-2024.
18 Mar 2024 -
பிரதமர் நரேந்தி மோடி இன்று சேலம் வருகை : பிரம்மாண்ட பிரச்சார கூட்டத்தில் பேசுகிறார்
18 Mar 2024சேலம் : இன்று சேலம் நகருக்கு வருகை தரும் பிரதமர் மோடி அங்கு நடைபெறவுள்ள பிரம்மாண்ட பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
-
பொன்முடி பதவியேற்பு விவகாரம்: கவர்னருக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
18 Mar 2024புதுடெல்லி : பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ஆர்.என்.
-
தமிழகத்தில் நாளை முதல் லேசான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
18 Mar 2024சென்னை : தமிழகத்தில் நாளை முதல் 23-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கோவை பார்லி. தொகுதியில் பா.ஜ.க.தான் போட்டியிடும் : அமைச்சர் எல்.முருகன் திட்டவட்டம்
18 Mar 2024கோவை : கோவை பா.ஜ.க. கோட்டையாக உள்ளது. இத்தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியிடுவது உறுதி என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
-
பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு: கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: அவசர வழக்காக விசாரிக்க தமிழக அரசு மனு தாக்கல்
18 Mar 2024புதுடெல்லி, பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
போதை பொருள் புழக்கம் அதிகரிப்பு: தமிழக அரசுக்கு எடப்பாடி கண்டனம்
18 Mar 2024சென்னை : தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரிப்புக்கு காரணமான தமிழக அரசுக்கு அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் போட்டியிட அனுமதிக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். மனு
18 Mar 2024சென்னை, அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
ரஷ்ய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புடின் வெற்றி : மே மாதம் பதவியேற்பு விழா நடக்கிறது
18 Mar 2024மாஸ்கோ : ரஷ்ய அதிபர் தேர்தலில் 87.29 சதவீத வாக்குகள் பெற்று புடின் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங். போட்டியிடும் 9 தொகுதிகள் : ம.தி.மு.க.வுக்கு திருச்சி ஒதுக்கீடு
18 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ம.தி.மு.க.
-
தி.மு.க.வின் பார்லி. தேர்தல் அறிக்கை 20-ம் தேதி வெளியாக வாய்ப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை 20-ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனய
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக், சென்னை அழைத்து வரப்பட்டார்
18 Mar 2024சென்னை : போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார்.
-
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழப்பு
18 Mar 2024பெஷாவர் : வடமேற்கு பாகிஸ்தானில் நேற்று காலை ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நடைபெற்றது.
-
திருச்செந்தூர் கோவிலில் ஓ.பி.எஸ். சிறப்பு வழிபாடு
18 Mar 2024திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறை நீட்டிப்பு
18 Mar 2024சென்னை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: 24-ம் தேதி திருச்சியில் பிரசாரத்தை துவக்குகிறார் எடப்பாடி பழனிசாமி
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை வருகிற 24-ம் தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் தொடங்குகிறார்.
-
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு பெற்றது: எந்தெந்த தொகுதிகளில் போட்டி - முழுவிவரம் வெளியீடு
18 Mar 2024சென்னை, தமிழ்நாட்டில் தி.மு.க.
-
கவர்னர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தமிழிசை சவுந்தரராஜன் ஜனாதிபதிக்கு கடிதம் : தமிழகத்தில் போட்டியிட போவதாக அறிவிப்பு
18 Mar 2024சென்னை : தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் மக்கள
-
டெல்லி குடிநீர் வாரிய ஒப்பந்த ஊழல் வழக்கு: அமலாக்க துறையின் சம்மனை புறக்கணித்தார் கெஜ்ரிவால்
18 Mar 2024புதுடெல்லி : டெல்லி குடிநீர் வாரிய ஒப்பந்தம் அளிக்கப்பட்டதில் ஊழல் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து அமலாக்கத்துறையின் விசாரணைக்கு முதல்வர் கெஜ்ர
-
பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை இ.பி.எஸ்.யிடம் ஒப்படைப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையின் இறுதி தொகுப்பை அ.தி.மு.க.
-
புதிய அரசின் முதல் 100 நாட்களுக்கான செயல்திட்டத்தை வகுக்க வேண்டும் : மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
18 Mar 2024புதுடெல்லி : தேர்தலுக்கு பிறகு அமையும் புதிய அரசின் முதல் 100 நாட்கள் மற்றும் 5 ஆண்டுகளுக்கான செயல்திட்டத்தை வகுக்குமாறு மத்திய அமைச்சர்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டு
-
டிராக்டருடன் கார் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி
18 Mar 2024பாட்னா : பீகாரில் டிராக்டருடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
சபர்மதி- ஆக்ரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து : பெரும் உயிர்சேதம் தவிர்ப்பு
18 Mar 2024ஜோத்பூர் : ராஜஸ்தானில் ஆஜ்மீர் அருகே சபர்மதி - ஆக்ரா விரைவு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை
-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க.
-
தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி: தமிழகத்தில் ஏப்ரல் 13-ம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வி துறை திட்டம்
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு எதிரொலியாக, தமிழகத்தில் ஏப்ரல், 13க்குள் அனைத்து தேர்வுகளையும் நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டு உள்ளது.