முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திடீர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேபாள பிரதமர் டிஸ்சார்ஜ்

வியாழக்கிழமை, 2 ஜூலை 2020      உலகம்
Image Unavailable

நேபாள பிரதமர் கேபி சங்மா ஒலி நெஞ்சு வலி காரணமாக காத்மண்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

நேபாள நாட்டின் பிரதமராக செயல்பட்டு வருபவர் கேபி சர்மா ஒலி. எல்லை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் இந்தியாவுடன் நேபாள பிரதமர் ஒலிக்கு கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. மேலும், இவர் சீன ஆதரவு நிலைபாட்டையே எடுத்து வருகிறார். இந்நிலையில், கேபி சர்மா ஒலிக்கு நேற்று முன்தினம் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் காத்மண்டுவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.  சிகிச்சைக்கு பின் பிரதமர் சர்மா ஒலி வீடு திரும்பி விட்டதாகவும், அவர் தற்போது பூரண உடல் நலத்துடன் இருப்பதாகவும் பிரதமரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து