முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விருதுநகர் மாவட்ட செயலாளராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும் நியமனம் : இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 3 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : விருதுநகர் மாவட்ட செயலாளராக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீண்டும் நியமனம் செய்யப்படுவதாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 

விருதுநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பிற்கு ஒருவர் நியமனம் செய்யப்படும் வரை மாவட்ட கட்சி பணிகளை கவனிப்பதற்கு பொறுப்பாளராக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நியமிக்கப்படுகிறார்.

கட்சியின் உடன்பிறப்புகள் அவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என கேட்டுக் கொள்வதாக அந்த அறிவிப்பில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து