முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமானோர் குணமடைந்து வருகின்றனர் : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெருமிதம்

வெள்ளிக்கிழமை, 3 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமானோர் குணமடைந்து வருவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெருமிதத்துடன் தெரிவித்தார். 

திருமங்கலம் தொகுதியில் உள்ள கப்பலூர் பகுதியில் தொழிலாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு அரிசி, காய்கறி தொகுப்பு, கபசுர குடிநீர் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை அம்மா பேரவை சார்பில் அம்மா பேரவை மாநில செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்டக் கழக துணைச் செயலாளர் அய்யப்பன், மாவட்ட இலக்கிய அணி திருப்பதி, ஒன்றிய செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது; 

கடந்த 100 நாட்களுக்கு மேலாக கொரோனா தொற்றுநோயால் உலகம் முழுவதும் இதுவரை ஒரு கோடியே 10 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நமது முதல்வர் இந்த தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையில் ஜனவரி மாதம் முதலே நடவடிக்கை மேற்கொண்டார். அதுமட்டுமல்லாது மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு அறிவுரைகளை வழங்கி வந்தார். 2 கோடியே 2 லட்சம் குடும்பங்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி மற்றும் தொடர்ந்து மூன்று மாதங்களாக நிவாரண தொகுப்புகளை முதல்வர் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து 36 லட்சம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் நிவாரணம் வழங்கினார். தற்பொழுது கூட மாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரண தொகையை முதல்வர் வழங்கி வருகிறார். இதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள 13 லட்சத்து 35ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறுவர்.  தற்பொழுது இந்த கொரோனா பணிக்காக மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணிகளுக்கு தற்பொழது14,814 பேரை முதல்வர் நியமித்து உள்ளார். 

அதே போல் மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை ஒப்பிட்டு பார்த்தால் தமிழகத்தில் தான் அதிகமான நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதே போல் அம்மா உணவகம் மூலம் கடந்த 100 நாட்களாக விலையில்லாமல் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதில் தினந்தோறும் 7 இலட்ச மக்கள் பயன் பெற்று வருகின்றனர். மகாராஷ்டிரா, டில்லி, குஜராத் ஆகிய மாநிலங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழகத்தில் தான் இறப்பு சதவீதம் மிகவும் குறைவு. அதேபோல் தமிழகத்தில்தான் 57 சதவீதம் பேர் குணமடைந்து இந்தியாவிலே குணமடைவோர் பட்டியலில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. 

மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தற்போது உள்ள பொருளாதார சூழ்நிலையில் உலகில் உள்ள நாடுகள் இந்தியாவிற்கு தொழில் முதலீடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.  ஆனால் நமது முதல்வர் இந்த கொரோனா தோற்று நோய் காலத்திலும் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை உயர்த்தும் வண்ணம் அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்களுடன் 15,128 கோடி அளவில் தொழில் முதலீட்டை தமிழகத்தில் ஈர்த்துள்ளார் இதன் மூலம் 40,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். 

இன்றைக்கு கூட கொரோனா தொற்றுதொற்று நோய் வந்த 90 வயது முதியவரை கூட நாம் காப்பாற்றி உள்ளோம். ஆகவே மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். மேலும் இந்திய அளவில் இருக்கும் மருத்துவர்கள் முதல்வர் எடுத்து வரும் நோய் தடுப்பு நடவடிக்கையை பாராட்டியுள்ளனர்.  முதல்வரின் வழிகாட்டுதல்படி அமைச்சர்கள் முதல் மாவட்ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையாளர்கள், காவல்துறை அதிகாரிகள், மருத்துவத்துறை அதிகாரிகள் ,உள்ளாட்சி அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகள் இப்படி அனைத்து அதிகாரிகளும் மற்றும் ஊழியர்களும் இரவு,பகல் பாராது மக்களுக்காக உழைத்து வருகிறார்கள். நிச்சயம் தமிழகம் கொரோனா தொற்று நோய் இல்லாத மாநிலமாக உருவாகும்.

ஆனால் இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தன் அரசியல் லாபத்திற்காக தினம் தினம் பொய்யான அறிக்கைகளை வெளியீட்டு வருகிறார். அவர் அறிக்கையில் ஒரு சதவீதம் கூட உண்மை இல்லை என்று மக்களுக்கு நன்றாக தெரியும் இன்றைக்கு நமது முதல்வர் தமிழகத்தில் உள்ள 234 தொகுதியில் இருக்கும் மக்களுக்கும் நிவாரண உதவிகளை வழங்கி, நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து மக்களை காத்து வருகிறார்.

அதுமட்டுமல்லாது ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் கொளத்தூர் தொகுதி மக்களுக்கு கூட நிவாரண உதவி வழங்கி தமிழக மக்களை ஒரு தாயாக முதல்வர் காத்து வருகிறார். இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து