முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் இன்று நள்ளிரவு வரை பெட்ரோல் பங்குகள் இயங்காது

சனிக்கிழமை, 4 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் இன்று நள்ளிரவு வரை இயங்காது என்று தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் முழுமுடக்கம் கடைப்பிடிக்கப்படும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பெட்ரோல் பங்குகள் இயங்காது என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது. இன்று முழு முடக்கம் கடைபிடிக்க உள்ளதையொட்டி தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

ஆம்புலன்ஸ், பால், அவசர மருத்துவ சிகிச்சை வாகனங்களுக்கு மட்டும் இன்று பெட்ரோல், டீசல் விற்பனை நடைபெறும். தமிழக அரசின் ஆணையை ஏற்று பெட்ரோல், டீசல் விற்பனை 24 மணி நேரம் நிறுத்தம் செய்யப்படும்.

பெட்ரோல் நிரப்ப வரும் வாகன ஓட்டிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். முகக்கவசம் அணியாதவர்களுக்கு பெட்ரோல் வழங்கப்பட மாட்டாது என்றும் உரிமையாளர்கள் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து