Idhayam Matrimony

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

சனிக்கிழமை, 4 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

ஜம்மு : காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.

காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள ஆரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அந்தப் பகுதியை சுற்றி வளைத்தனர்.  அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. 

இந்த என்கவுண்டரில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவனை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது என காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து