முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிறந்தாளையொட்டி சென்னை கிண்டியில் நாளை இரட்டைமலை சீனிவாசனின் திருவுருவ படத்திற்கு மாலையணிவித்து மரியாதை

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : இரட்டைமலை சீனிவாசனின் பிறந்த நாளையொட்டி நாளை 7-ம் தேதி சென்னையில் கிண்டி காந்திமண்டப வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, 

ஒவ்வொரு ஆண்டும் அரசின் சார்பில், ஜூலை 7-ம் நாள் இரட்டைமலை சீனிவாசனின் பிறந்தநாள் விழா சென்னையில் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள இரட்டைமலை சீனிவாசனின் திருவுருவச்சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்படவுள்ள அன்னாரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்யப்படுகிறது. 

பொதுமக்களின் நலன் கருதி, கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் நோக்கத்தில், சென்னை முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவினை கடுமையாக கடைப்பிடிக்க, பொதுமக்கள் கூடும் அனைத்து நிகழ்ச்சிகளும், விழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

எனவே, வருகின்ற ஜூலை 7-ம் நாள் இரட்டைமலை சீனிவாசனின் பிறந்தநாளன்று கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்படவுள்ள அன்னாரது திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் மட்டும் மலர்தூவி மரியாதை செலுத்துவார்.

144 தடை உத்தரவு காரணமாக இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டாம் எனவும், இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து