முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வரின் நடவடிக்கையால் கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை 62 சதவீதமாக உயர்ந்துள்ளது: அமைச்சர் காமராஜ்

திங்கட்கிழமை, 6 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கோடம்பாக்கம் மற்றும் அண்ணாநகர் மண்டல பகுதிகளில் நடைபெற்ற வரும் மருத்துவ முகாம்களை அமைச்சர் காமராஜ் நேரில் ஆய்வு செய்து அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார். கோடம்பாக்கம் காமராஜ் காலனியில் நடைபெற்ற மருத்துவ முகாமை ஆய்வு செய்த பின்னர் பொது மக்களுக்கு முககவசம், கபசுர குடிநீர் மற்றும் கையேடு ஆகியவற்றை அமைச்சர் வழங்கினார். 

அதனை தொடர்ந்து அமைச்சர் பேசுகையில்,  அம்மாவின் நல்லாசியுடன், முதல்வர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை இந்திய திருநாட்டில் ஒரு முன் உதரணமாக தன்னுடைய செம்மையான, உறுதியான நடவடிக்கையின் மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் அதிக எண்ணிக்கையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பி செல்கின்ற நிலை உருவாக்கியிருக்கிறார். 

இதுவரை சென்னை மாநகராட்சியில் 12712 காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 820358 நபர்கள் பயனடைந்து உள்ளனர்.   அதில் 38280 அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, அவர்களுக்கு உடனுக்குடன் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதால் தான், பாதிக்கப்பட்டவர்களின் 62 சதவீதம் பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி சென்றியிருக்கிறார்கள். 

முதல்வரின்  ஆணைப்படி எங்களை போன்ற அமைச்சர்களை சட்டமன்ற உறுப்பினர்களுடன்  ஓருங்கிணைந்து 15 மாநகராட்சி மண்டலங்களில் மூன்று மண்டலங்களுக்கு ஒரு அமைச்சர் என்ற வகையில் கொரோனா தடுப்பு பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.  மாநகராட்சியில் தொற்று எண்ணிக்கை குறைந்துக் கொண்டு இருக்கிறது,

உதரணமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 14 நாட்களுக்கு முன்னர் பாதிக்கப்பட்ட தெருக்கள் 2414 ஆகும். இதில் தற்போது 990 தெருக்கள் பாதிப்பே இல்லாமல் இருக்கிறது, ஒருவருக்கு கூட தொற்று ஏற்படவில்லை. இவையெல்லாம் முதல்வர் எடுத்த உறுதியான நடவடிக்கையால் மருத்துவ ரிதியான வெற்றி. தமிழகத்தை பொருத்தவரை உணவு பற்றக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை. இப்பொழது கிடங்குகளில் மூன்று மாதத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். 

பின்னர் மண்டலம் 10 அலுவலகத்தில் மண்டலம் 10 தொடர்புடைய அனைத்து அலுவலர்களுடன் அமைச்சர் காமராஜ் ஆய்வு மேற்கொண்டார்.             அதை தொடர்ந்து மண்டலம் 9 நெல்சன் மாணிக்கம் சாலையில் அமைக்கப்பட்டு இருந்த மருத்துவ முகாம் அருகில் இருந்த நடமாடும் சுவாப் பரிசோதனை மையத்தில் நடைபெறும் பரிசோதனை குறித்து கேட்டறிந்தார்.  பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ  முகாமை ஆய்வு செய்து பொது மக்களுக்கு முககசம், கபசுர குடிநீர் மற்றும் கையேடு ஆகியவற்றை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிகளின் போது தி.நகர் சட்டமன்ற உறுப்பினர்  பி.சத்யா,  மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் டாக்டர். எஸ். வினீத், கோபால சுந்தர ராஜ், துணை காவல் கண்காணிப்பாளர் எம்.எஸ் முத்துசுவாமி, கே.மீனா, கலைசெல்வன், எஸ். சாந்தி, மண்டல அலுவலர்கள் ஜெய்பீம், சுந்தர்ராஜன் மற்றும் தொடர்புடைய மண்டல அலுவலர்களும் உடனிருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து