எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், விருதுநகர் தி.மு.க. மாவட்டச் செயலாளருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்., அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு மீண்டும் பதவி வழங்குவதற்கு விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இது குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளதாவது
அ.தி.மு.க.வில் அமைச்சராகி தற்போது தி.மு.க.வில் அடைக்கலம் பெற்ற கே.கே.எஸ்.எஸ்.ஆர். அறிக்கைவெளியிட்டுள்ளார். அதில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பதவிக்காக தான் அறிக்கை வெளியிட்டுள்ளார் என அறிக்கை வெளியிட்டிருப்பது, அவர் தி.மு.க.வில் தன்னை நிருபித்துக் கொள்ளவே ஆகும்.
இதுபோன்ற அறிக்கைகள் அவரின் தரத்தை மதிப்பை குறைக்கவே செய்கிறது. ஏதோ ஒரு புதிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்தது போல அறிக்கை வெளியிட்டுள்ளார். சாத்தான்குளம் சம்பவத்தில் நீதியை நிலை நாட்ட சட்டப்படி நடவடிக்கைகளை முதலமைச்சர் எடுத்து வருகிறார்.
ஆனால் இதில் அரசியல் ஆதாயத்திற்காக கல்நெஞ்சம் படைத்த அரசியல்வாதிகள் கொச்சைப்படுத்தும் வகையில் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். சிறைத்துறை சம்பவம் என்றால் சிறைக்கண்காணிப்பாளர் அரசுக்கு குறிப்பு அனுப்புவார். எதிர்க்கட்சிகள் போல் நினைத்த நேரத்தில் நினைத்த கருத்துக்களை பேச முடியாது.
சாத்தான்குளம் சம்பவத்தில் சிறைத்துறையால் கொடுக்கப்பட்ட சட்ட ரீதியான குறிப்புகளை வைத்தே முதல்வர் பேசினார். அதுகுறித்து தான் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெளிவாக அறிக்கையில் கூறியிருந்தார்.
முன்னாள் அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ். ராமசந்திரன் தி.மு.க.வில் காலாவதியான நிலையில் தான் இன்னமும் இருக்கிறேன் என்பதை உணர்த்த அறிக்கை வெளியிட்டுள்ளார். பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தனது உழைப்பால் நம்பிக்கையால் மக்கள் சேவையால் தலைமை மீது நம்பிக்கையால் தலைமை அவருக்கு பதவி வழங்கியுள்ளது. அதை கொச்சைப்படுத்தும் வகையில் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதன் மூலம் தனது தரத்தை தாழ்த்தி கொண்டுள்ளார். நீங்கள் தலைமை செல்வாக்கை பெறவேண்டும் என்றால் உழைப்பின் மூலம், நம்பிக்கை மூலம் பெற முடியும். ஆனால் இதுபோன்ற அறிக்கை மூலம் பெற வேண்டும் என்றால் உங்கள் தரம் தாழ்ந்துதான் போகும்.
அ.தி.மு.க. மூலம் அடையாளம் பெற்று தி.மு.க.வில் அடைக்கலமான நீங்கள் அங்கு மாவட்டச் செயலாளர் பதவி பெற்ற யாசகத்தை எப்படி பெற்றது என்று விளக்கத்தை சொல்லி விட்டு கே. டி. ராஜேந்திரபாலாஜி பற்றி விமர்சனம் செய்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். சிறை சம்பவம் என்றால் சிறைக் கண்காணியாளர் கொடுத்த அறிக்கை அடிப்படையில் தான் முதல்வர் பேச முடியும்.
மக்களை குழப்பி அறிக்கை விட்டு அதில் எதிர்கட்சிகள் குளிர் காயலாம் என நினைக்கின்றனர். சாத்தான்குளம் சம்பவம் எல்லோருக்கும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீதி நிலை நாட்ட சி.பி.ஐ. விசாரணை என்று அறிவித்தால் அந்த விசாரணையால் காலதாமதம் ஆகும் என்று கூறுகிறார்கள்.
சி.பி.ஐ. விசாரணை வைக்காவிட்டால் நீதியை மறைக்கிறார்கள் என அரசை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வார்கள். மக்களை காப்பது எதிர்க்கட்சிகளின் நோக்கம் அல்ல. மக்களை குழப்பவது அவர்களின் நோக்கம். நாட்டு மக்களுக்கு நன்மை செய்யும் அறிக்கைகளை எதிர்க்கட்சிகள் கொடுக்கவில்லை.
மக்களிடம் பீதியை குழப்பத்தை நம்பிக்கையை சிதைக்கிற அறிக்கையையே கொடுக்கின்றனர். தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சியை தான் நடத்தி வருகிறோம். சல்லடை போட்டு காரணத்தைத் தேடி தினம் தினம் பத்து அறிக்கைகளை வெளியிடுவார்கள். அது மக்கள் நன்மையே விளைவிக்கும் அறிக்கை கிடையாது.
மக்களை நம்பிக்கையை சிதைக்கும் அறிக்கையாகும். இதன் நோக்கம் என்றால் அரசியல் அதிகாரப் பசி ஆகும். மக்களின் நம்பிக்கையை பெற்று விடலாம் என்று எதிர்க்கட்சிகள் கனவு காண்கின்றனர்.
அது ஒருபோதும் நடக்காது. இங்கு நடப்பது சட்டத்தின் ஆட்சி. அம்மாவின் வழியில் தன் உழைப்பால் மக்களுக்கு சேவை செய்து அதன் மூலம் மக்கள் சக்தி படைத்த நமது முதலமைச்சரை எதிர்க்கட்சிகள் அசைத்துப் பார்க்க நினைக்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது.
களத்தில் காணாமல் போனவர்கள் எங்கே மக்களிடத்தில் மனுக்கள் வாங்கினால் மக்களின் இதயத்தில் இடம் பிடித்து விடலாம் என்று நினைத்தார்கள். ஆனால் ஒருபோதும் அது எடுபடவில்லை. தற்போது அறிக்கையில் மூலம் அரசியல் நாடகத்தை நடத்துகிறார்கள். அதுவும் மக்கள் நம்பத் தயாராக இல்லை.
இன்றைக்கு இந்தியாவிற்கு வழிகாட்டும் வகையில் ஒரு சிறந்த நிர்வாகத்தை நடத்தி மக்களின் நன்மதிப்பைப் பெற்று ஒரு சாமானிய முதல்வராய் சரித்திரம் படைத்த வரும் நமது முதலமைச்சருக்கு பின்னால் ஒட்டுமொத்த தமிழகமும் அணிவகுத்து இருக்கின்றது. அதனால் இந்த பொய் பிரச்சாரமும் ஒரு போதும் எடுபடாது. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
இலங்கை சிறையில் இருந்து 33 தமிழக மீனவர்கள் விடுதலை
27 Mar 2024சென்னை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 33 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவ
-
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடலாம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024சென்னை, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எந்தவித தடையும் இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
-
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு திடீர் உடல்நலக்குறைவு: ஆம் ஆத்மி
27 Mar 2024புதுடெல்லி, 7 நாட்களாக சிறையில் உள்ள நிலையில் கெஜ்ரிவாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி தகவல் தெரிவித்துள்ளது.
-
உ.பி. மீரட்டில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி
27 Mar 2024லக்னோ, உ.பி. மீரட்டில் இருந்து தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்குகிறார்.
-
மகாராஷ்டிரா மாநிலத்தில் இடைத்தேர்தல் நிறுத்தம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024மும்பை, மராட்டிய மாநிலம் அகோலா- மேற்கு தொகுதி இடைத்தேர்தலை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க கடும் தோல்வியை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி அறிக்கை
27 Mar 2024சென்னை, குறுக்கு வழிகளில் செயல்படும் தி.மு.க பாராளுமன்றத் தேர்தலில் கடும் தோல்வியை சந்திக்கும் என்ற அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ்நாட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
27 Mar 2024சென்னை, பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக சென்னை, ராமநாதபுரம் உள்பட தமிழகத்தின் 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.