முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.வால் அடையாளம் காணப்பட்ட கே.கே.எஸ்.எஸ்.ஆர்., தி.மு.க.வில் பதவி பெற்ற யாசகத்தை வெளியிட தயாரா? -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலடி

திங்கட்கிழமை, 6 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், விருதுநகர் தி.மு.க. மாவட்டச் செயலாளருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்., அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு மீண்டும் பதவி வழங்குவதற்கு விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இது குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளதாவது 

அ.தி.மு.க.வில் அமைச்சராகி தற்போது தி.மு.க.வில் அடைக்கலம் பெற்ற கே.கே.எஸ்.எஸ்.ஆர். அறிக்கைவெளியிட்டுள்ளார். அதில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பதவிக்காக தான் அறிக்கை வெளியிட்டுள்ளார் என அறிக்கை வெளியிட்டிருப்பது, அவர் தி.மு.க.வில் தன்னை நிருபித்துக் கொள்ளவே ஆகும்.

இதுபோன்ற அறிக்கைகள் அவரின் தரத்தை மதிப்பை குறைக்கவே செய்கிறது. ஏதோ ஒரு புதிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்தது போல அறிக்கை வெளியிட்டுள்ளார். சாத்தான்குளம் சம்பவத்தில் நீதியை நிலை நாட்ட சட்டப்படி நடவடிக்கைகளை முதலமைச்சர் எடுத்து வருகிறார்.

ஆனால் இதில் அரசியல் ஆதாயத்திற்காக கல்நெஞ்சம் படைத்த அரசியல்வாதிகள் கொச்சைப்படுத்தும் வகையில் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். சிறைத்துறை சம்பவம் என்றால் சிறைக்கண்காணிப்பாளர் அரசுக்கு குறிப்பு அனுப்புவார். எதிர்க்கட்சிகள் போல் நினைத்த நேரத்தில் நினைத்த கருத்துக்களை பேச முடியாது.

சாத்தான்குளம் சம்பவத்தில் சிறைத்துறையால் கொடுக்கப்பட்ட சட்ட ரீதியான குறிப்புகளை வைத்தே முதல்வர் பேசினார். அதுகுறித்து தான் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெளிவாக அறிக்கையில் கூறியிருந்தார். 

முன்னாள் அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ். ராமசந்திரன் தி.மு.க.வில் காலாவதியான நிலையில் தான் இன்னமும் இருக்கிறேன் என்பதை உணர்த்த அறிக்கை வெளியிட்டுள்ளார். பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தனது உழைப்பால் நம்பிக்கையால் மக்கள் சேவையால் தலைமை மீது நம்பிக்கையால் தலைமை அவருக்கு பதவி வழங்கியுள்ளது. அதை கொச்சைப்படுத்தும் வகையில் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதன் மூலம் தனது தரத்தை தாழ்த்தி கொண்டுள்ளார். நீங்கள் தலைமை செல்வாக்கை பெறவேண்டும் என்றால் உழைப்பின் மூலம், நம்பிக்கை மூலம் பெற முடியும். ஆனால் இதுபோன்ற அறிக்கை மூலம் பெற வேண்டும் என்றால் உங்கள் தரம் தாழ்ந்துதான் போகும்.

அ.தி.மு.க. மூலம் அடையாளம் பெற்று தி.மு.க.வில் அடைக்கலமான நீங்கள் அங்கு மாவட்டச் செயலாளர் பதவி பெற்ற யாசகத்தை எப்படி பெற்றது என்று விளக்கத்தை சொல்லி விட்டு கே. டி. ராஜேந்திரபாலாஜி பற்றி விமர்சனம் செய்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். சிறை சம்பவம் என்றால் சிறைக் கண்காணியாளர் கொடுத்த அறிக்கை அடிப்படையில் தான் முதல்வர் பேச முடியும்.

மக்களை குழப்பி அறிக்கை விட்டு அதில் எதிர்கட்சிகள் குளிர் காயலாம் என நினைக்கின்றனர். சாத்தான்குளம் சம்பவம் எல்லோருக்கும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீதி நிலை நாட்ட சி.பி.ஐ. விசாரணை என்று அறிவித்தால் அந்த விசாரணையால் காலதாமதம் ஆகும் என்று கூறுகிறார்கள்.

சி.பி.ஐ. விசாரணை வைக்காவிட்டால் நீதியை மறைக்கிறார்கள் என அரசை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வார்கள். மக்களை காப்பது எதிர்க்கட்சிகளின் நோக்கம் அல்ல. மக்களை குழப்பவது அவர்களின் நோக்கம். நாட்டு மக்களுக்கு நன்மை செய்யும் அறிக்கைகளை எதிர்க்கட்சிகள் கொடுக்கவில்லை.

மக்களிடம் பீதியை குழப்பத்தை நம்பிக்கையை சிதைக்கிற அறிக்கையையே கொடுக்கின்றனர். தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சியை தான் நடத்தி வருகிறோம். சல்லடை போட்டு காரணத்தைத் தேடி தினம் தினம் பத்து அறிக்கைகளை வெளியிடுவார்கள். அது மக்கள் நன்மையே விளைவிக்கும் அறிக்கை கிடையாது.

மக்களை நம்பிக்கையை சிதைக்கும் அறிக்கையாகும். இதன் நோக்கம் என்றால் அரசியல் அதிகாரப் பசி ஆகும். மக்களின் நம்பிக்கையை பெற்று விடலாம் என்று எதிர்க்கட்சிகள் கனவு காண்கின்றனர்.

அது ஒருபோதும் நடக்காது. இங்கு நடப்பது சட்டத்தின் ஆட்சி. அம்மாவின் வழியில் தன் உழைப்பால் மக்களுக்கு சேவை செய்து அதன் மூலம் மக்கள் சக்தி படைத்த நமது முதலமைச்சரை எதிர்க்கட்சிகள் அசைத்துப் பார்க்க நினைக்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது.

களத்தில் காணாமல் போனவர்கள் எங்கே மக்களிடத்தில் மனுக்கள் வாங்கினால் மக்களின் இதயத்தில் இடம் பிடித்து விடலாம் என்று நினைத்தார்கள். ஆனால் ஒருபோதும் அது எடுபடவில்லை. தற்போது அறிக்கையில் மூலம் அரசியல் நாடகத்தை நடத்துகிறார்கள். அதுவும் மக்கள் நம்பத் தயாராக இல்லை.

இன்றைக்கு இந்தியாவிற்கு வழிகாட்டும் வகையில் ஒரு சிறந்த நிர்வாகத்தை நடத்தி மக்களின் நன்மதிப்பைப் பெற்று ஒரு சாமானிய முதல்வராய் சரித்திரம் படைத்த வரும் நமது முதலமைச்சருக்கு பின்னால் ஒட்டுமொத்த தமிழகமும் அணிவகுத்து இருக்கின்றது. அதனால் இந்த பொய் பிரச்சாரமும் ஒரு போதும் எடுபடாது. இவ்வாறு அவர் கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து