எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் இ-பாஸ் நொடியில் கிடைக்கும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை திரு.வி.க.நகர் மண்டலத்தில் உள்ள கொளத்தூரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
முழு ஊரடங்கின் போது மக்கள் எப்படி முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார்களோ, அதே போல் தளர்வுகளுடன் கூடிய பொது ஊரடங்கின் போதும் மக்கள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும். அது தான் மக்களிடம் நாங்கள் வேண்டுகோளும் எதிர்ப்பார்ப்பும் ஆகும்.
அத்தியாவசிய தேவைகள் இருக்கும்போது மற்ற நேரங்களில் வெளியே போகக்கூடாது. வெளியே செல்லும் போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முகக்கவசங்களை கண்டிப்பாக அணிய வேண்டும், அடிக்கடி கைகளை தூய்மைப்படுத்தி கொள்ள வேண்டும். ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும், நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்குவதற்கான கபசுர குடிநீரை குடிக்க வேண்டும், என்பது தான் எங்களது வேண்டுகோளாகும்.
பொது ஊரடங்கு என்பது வரும் 31-ம் தேதி வரை நீடிக்கப்பட்டிருக்கிறது, முழு ஊரடங்கின்போது எப்படி ஒத்துழைப்பு அளித்தீர்களோ அதே போல இப்போதும் ஒத்துழைக்க வேண்டும். அவசியமின்றி வெளியே வரக்கூடாது ஏனென்றால் உலக நாடுகள் அச்சுறுத்தலாக இந்த நோய்த்தொற்று அமைந்திருக்கிறது.
இந்த நோய்த்தொற்றை கண்டு வல்லரசு நாடுகளே தத்தளித்து கொண்டிருக்கின்றன. எந்தவொரு காலத்திலும் இப்படியொரு அச்சுறுத்தலை மனிதகுலம் சந்தித்ததில்லை, இந்த நோய்த்தொற்று காற்றின் மூலம் பரவுகிறதா என்றும் எப்படி பரவுகிறது என்றும் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மனிதர்களிடமிருந்து மனிதர்கள் மூலமாக பரவிக் கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை, இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு மக்கள் 90 சதவீதம் ஒத்துழைத்தால் கட்டுப்படுத்தி விடலாம். அரசும் அரசு அலுவலர்களும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். எனினும் மக்களின் நூறு சதவீதம் ஒத்துழைப்பு இருந்தால்தான் இந்த நோயை கட்டுப்படுத்த முடியும்.
இப்போது திரு.வி.க.நகர் நோய்த்தொற்றில் 7-வது மண்டலமாக இப்போது இருக்கிறது, வெகுவிரைவில் கடைசி மண்டலமாக நோய்த்தொற்றில் இருந்து பாதுகாக்கப்பட்ட மண்டலமாக உருவாகும், இந்த மண்டலத்தில் நோய்த்தொற்றால் 5,519 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அதில் 3358 பேர் குணமடைந்திருக்கிறார்கள். இரண்டு பணியாளர்கள் நோய்த்தொற்றில் இருந்து இப்போது குணமடைந்து பணிக்கு திரும்பியிருக்கிறார்கள், இதுதான் மக்களுக்கு நம்பிக்கையூட்டக்கூடிய செய்தியாகும். இ-பாஸ் என்பது பொது ஊரடங்கில் தளர்வுகள் இருக்கும் போது அவசியமின்றி வெளியே செல்லக்கூடாது, அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு கொடுக்கப்படக் கூடியதாகும், இ-பாஸ் என்பது தகுதியானவர்களுக்கு கிடைக்கும், உரிய ஆவணங்களோடு முறையாக விண்ணப்பித்தால் இ-பாஸ் சில நொடிகளில் கிடைத்து விடும்,
அதற்காகவே அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள், அதில் முறைகேடு நடந்தால் சீர் செய்யப்படும், உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணத் தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு மனிதாபிமானத்தோடு தலா ரூ. 2 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது, அவர்கள் பதிவு செய்திருந்தால் உரிய முறையில் வழங்கப்படுகிறது,
பதிவு செய்யாமல் விடுபட்டவர்களுக்கும் வழங்க சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன, வாடகை வழங்குவதற்கும் உரிய கால அவகாசங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதையும் மீறி அழுத்தம் கொடுத்தால், தேவையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.