முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உரிய ஆவணங்கள் விண்ணப்பித்தால் சில நொடியில் இ-பாஸ் கிடைக்கும்: அமைச்சர் உதயகுமார் உறுதி

செவ்வாய்க்கிழமை, 7 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால்  இ-பாஸ் நொடியில்  கிடைக்கும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை திரு.வி.க.நகர் மண்டலத்தில் உள்ள கொளத்தூரில்  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.  அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

முழு ஊரடங்கின் போது மக்கள் எப்படி முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார்களோ, அதே போல் தளர்வுகளுடன் கூடிய பொது ஊரடங்கின் போதும் மக்கள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும். அது தான் மக்களிடம் நாங்கள் வேண்டுகோளும் எதிர்ப்பார்ப்பும் ஆகும்.

அத்தியாவசிய தேவைகள் இருக்கும்போது மற்ற நேரங்களில் வெளியே போகக்கூடாது. வெளியே செல்லும் போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்,  முகக்கவசங்களை கண்டிப்பாக அணிய வேண்டும், அடிக்கடி கைகளை தூய்மைப்படுத்தி கொள்ள வேண்டும். ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும், நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்குவதற்கான கபசுர குடிநீரை குடிக்க வேண்டும்,   என்பது தான் எங்களது வேண்டுகோளாகும்.

பொது ஊரடங்கு என்பது வரும் 31-ம் தேதி வரை நீடிக்கப்பட்டிருக்கிறது,  முழு ஊரடங்கின்போது எப்படி ஒத்துழைப்பு அளித்தீர்களோ அதே போல இப்போதும் ஒத்துழைக்க வேண்டும். அவசியமின்றி வெளியே வரக்கூடாது  ஏனென்றால் உலக நாடுகள்  அச்சுறுத்தலாக இந்த நோய்த்தொற்று அமைந்திருக்கிறது.

இந்த நோய்த்தொற்றை கண்டு வல்லரசு நாடுகளே தத்தளித்து கொண்டிருக்கின்றன. எந்தவொரு காலத்திலும் இப்படியொரு அச்சுறுத்தலை மனிதகுலம் சந்தித்ததில்லை,  இந்த நோய்த்தொற்று காற்றின் மூலம் பரவுகிறதா என்றும் எப்படி பரவுகிறது என்றும் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மனிதர்களிடமிருந்து மனிதர்கள் மூலமாக பரவிக் கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை,  இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு மக்கள் 90 சதவீதம் ஒத்துழைத்தால் கட்டுப்படுத்தி விடலாம். அரசும் அரசு அலுவலர்களும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். எனினும்  மக்களின் நூறு சதவீதம் ஒத்துழைப்பு இருந்தால்தான் இந்த நோயை கட்டுப்படுத்த முடியும். 

இப்போது திரு.வி.க.நகர்  நோய்த்தொற்றில் 7-வது மண்டலமாக  இப்போது இருக்கிறது, வெகுவிரைவில் கடைசி மண்டலமாக நோய்த்தொற்றில் இருந்து பாதுகாக்கப்பட்ட மண்டலமாக உருவாகும், இந்த மண்டலத்தில் நோய்த்தொற்றால் 5,519 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதில் 3358 பேர் குணமடைந்திருக்கிறார்கள். இரண்டு பணியாளர்கள் நோய்த்தொற்றில் இருந்து இப்போது குணமடைந்து பணிக்கு திரும்பியிருக்கிறார்கள், இதுதான் மக்களுக்கு நம்பிக்கையூட்டக்கூடிய செய்தியாகும்.  இ-பாஸ் என்பது பொது ஊரடங்கில் தளர்வுகள் இருக்கும் போது அவசியமின்றி வெளியே செல்லக்கூடாது, அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு கொடுக்கப்படக் கூடியதாகும், இ-பாஸ் என்பது தகுதியானவர்களுக்கு கிடைக்கும்,  உரிய  ஆவணங்களோடு முறையாக விண்ணப்பித்தால் இ-பாஸ் சில நொடிகளில் கிடைத்து விடும்,

அதற்காகவே அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள், அதில்  முறைகேடு நடந்தால் சீர் செய்யப்படும், உரிய விசாரணை நடத்தப்பட்டு  நடவடிக்கை எடுக்கப்படும்.   ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணத் தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு மனிதாபிமானத்தோடு  தலா ரூ. 2 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது, அவர்கள் பதிவு செய்திருந்தால் உரிய முறையில் வழங்கப்படுகிறது,

பதிவு செய்யாமல் விடுபட்டவர்களுக்கும் வழங்க சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன, வாடகை  வழங்குவதற்கும் உரிய கால அவகாசங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதையும் மீறி அழுத்தம் கொடுத்தால், தேவையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து