முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின்விசை நிதி - அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கிய புதிய வலைதளம் மற்றும் கைபேசி செயலி : முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார்

புதன்கிழமை, 8 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  7.7.2020 அன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள www.tnpowerfinance.comஎன்ற புதிய வலைதளத்தையும், TNPFCL என்ற  கைப்பேசி செயலியையும் துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசுக்கு முழுவதும் சொந்தமான பொதுத்துறை நிறுவனமாக தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் ஒரு வங்கி சாரா நிதி நிறுவனமாக (வைப்பீடு) 1991-ம் ஆண்டு அம்மாவால் துவங்கப்பட்டது. இந்நிறுவனம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் உள் கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியுதவி வழங்கி வருகிறது.

இந்நிறுவனம் பொதுமக்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வைப்பீடுகள் மூலம் நிதி திரட்டி வருகிறது. மேலும், இந்நிறுவனம் பொது நிதி நிறுவனமாக பத்து லட்சத்திற்கும் மேலான வைப்பீட்டாளர்களுக்கு பொதுத்துறை வங்கிகளை விட அதிக வட்டியை அளித்து வருகிறது.

தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தால் வைப்பீட்டாளர்களின் நலனிற்காக, அதன் செயல்பாடுகளை தகவல் தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி online மூலமாக செயல்படுத்திடும் வகையில், www.tnpowerfinance.comஎன்ற புதிய வலைதளமும், TNPFCL என்ற  கைப்பேசி செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்புதிய வலைதளத்தையும், கைப்பேசி செயலியையும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். மேலும், இப்புதிய வலைதளத்தின் மூலமாக தமிழக முதல்வர், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்திலுள்ள 8,000 பயனாளிகளுக்கு 30 கோடி ரூபாய் நிதியை வழங்கினார். 

இப்புதிய வலைதளத்தின் மூலம், வைப்பீட்டாளர்கள் வைப்பீட்டு கணக்கை துவக்குதல், புதுப்பித்தல், முதிர்வடைந்த வைப்பீட்டு தொகையை பெறுதல், வைப்பீட்டு தொகையின் மூலம் கடன் பெறுதல், Nominees பெயர் மாற்றம் செய்தல், வங்கி விவரங்களை புதுப்பித்தல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்ள முடியும்.

மேலும், தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு முதல்வரிடம், அமைச்சர் தங்கமணி 5 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் தங்கமணி, தலைமைச் செயலாளர் சண்முகம், எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) பிரபாகர், தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சந்திரகாந்த் பி. காம்ப்ளே மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து