முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பணியாற்றும்: வங்கி ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க நிர்மலா சீதாராமன் உத்தரவு

வியாழக்கிழமை, 9 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

கொரோனா வைரஸ் காலத்தில் பணியாற்றும் வங்கி ஊழியர்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்க மாநில அரசுகளுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.

குஜராத் மாநிலம் சூரத்தில் கடந்த மாதம் கனரா வங்கியின் பெண் ஊழியர் ஒருவரை போலீஸார் தாக்கியது, மகாராஷ்டிராவில் வங்கி ஊழியர்கள் மீது தாக்குதல் போன்ற சம்பவங்கள் நடந்தன. இதனை தொடர்ந்து அனைத்து வங்கி ஊழியர்கள் அமைப்பு ஊழியர்களுக்கு பாதுகாப்பான சூழல் தேவை எனக் கேட்டுக் கொண்டதை தொடர்ந்து வங்கி ஊழியர்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்திருந்தார்.

இதையடுத்து அனைத்து மாநிலங்களுக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார். கொரோனா வைரஸ் உள்பட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் வங்கி ஊழியர்கள் மக்களுக்காக பணியாற்றி வருகிறார்கள். அவர்களின் பாதுகாப்புக்கும், மரியாதைக்கும் சிறிதும் அச்சுறுத்தல் இல்லாத சூழல் நிலவ வேண்டும். சமூக விரோதிகள் வங்கிக்குள் நுழைந்து, வங்கி ஊழியர்களை மிரட்டுவது அவதூறாக பேசுவது போன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. வங்கி ஊழியர்கள் மீது தாக்குதலில் ஈடுபடுவோர், வங்கி ஊழியர்களிடம் தகாத முறையில் பேசுவோர் ஆகியோர் மீது மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறேன் என்று அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து